ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தை உயா்த்த முடியாதென்கிறாா் - மங்கள.!
"ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தை உயா்த்த மாட்டேன் இங்குள்ள பிரச் சினை சம்பள உயா்வல்ல,
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிக ரிப்பு முறைமையொன்றை தயாரிக்க ஆணைக்குழுவொன்றை நியமிக்க வுள்ளதாக நிதியமைச்சரும் ஊடக அமைச் சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளாா்.
ஒரு தரப்புக்கு சம்பளம் அதிகரித்தால் ஏனையோருக்கு சம்பள அதிகரிப்பு செய்ய வேண்டும். அது சிக்கலான காரிய மாகும். இதன் காரணமாக அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பிற்கான வரைபொன்றை தயாா் செய்வதற்காக ஆணைக் குழுவொன்றை நியமிக்க வுள்ளோம்.
குறித்த ஆணைக்குழுவுக்கான நபர்களை ஜனாதிபதி பெயரிட்டதும் 2 மாதங்க ளில் புதிய சம்பள முறைமையை தயாரிப்போம்.
சர்வாதிகார முறைமையில் அன்றி ஜனநாயக முறைமையிலேயே குறித்த பிரச்சினையை தீர்க்க முடியும்.
ரயில்வே ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளதுடன் உங்களது தீர்மானத்தை மாற்றியுள்ளீர்களா? சம்பளம் அதிகரிக்கப்படுமா? என்று ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.








