யுத்தத்தினால் தமிழ் மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். விக்கி.!
வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் நீண்ட கால யுத்தத்துக்கு பின்னர் உளநல பாதிப்புக்குள்ளாகி காணப்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
மன்னார் மாவட்டத்தில் குடும்ப நல பணியகத்தின் அனுசரனையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிதி உத வியுடன் மன நலம் தொடர்பான நடை பவனி இன்று காலை 8.30 மணியள வில் மன்னார் மாவட்டச் செயலகத் திற்கு முன்பாக ஆரம்பமாகியுள்ளது.
குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் இம் மக்களை உள நல ரீதியில் சுகதேகியாக்க தாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்கவில்லை.
எனவே விரைந்து பணியாற்றி இவ்வாறான உளநல பிரச்சினையால் பாதிக்கப் பட்டவர்களை சமுதாய நிரோட்டத்தில் இணைப்பது முக்கியம். உளநல ரீதி யில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிகிச்சை அளிப்பதற்காக இந்தியாவில் இரு ந்து தமிழ் தெரிந்த நிபுணர்களை அழைத்து வருவதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் ஏதோ ஒரு வகையில் உளம் சார்ந்த பிரச்சினைக்கு ஆளாவதுடன், உடல் நோயை கவ னித்து வரும் மக்கள் தங்கள் உளம் சார்ந்த பிரச்சினையை கவனிப்பதே இல்லை.
இதனால் தற்கொலைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துள்ளது.
எனவே மக்கள் மன நலம் மற்றும் உளவியல் சார்ந்த விடயங்களில் விழிப் புணா்வு ஏற்படுத்தும் வகையில் குறித்த நடை பவனி ஒழுங்கமைக்கப்பட்டுள் ளது.
மன்னாரில் இன்று ஆரம்பிக்கப்பட்ட நடை பவனியானது ஆறு நாட்களாக நடைபெற்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியா புதிய பஸ் நிலையத் தில் நிறைவடையும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலன் மற்றும் மன் னார் நகர சபை தலைவர் ஞ.அன்ரனி டேவிற்சன், குடும்ப நலப் பணியாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக ஊழியர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனா்.











