மன்னாரில் மீண்டும் புலிகளாம் - விமல்
மன்னார் பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப்புலிகள் எவ்வித தடையேது மின்றி செயற்படுவதால் மீண்டும் விடுதலைப்புலிகள் அப்பகுதியில் தலை தூக்கும் அபாயம் நிலவியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மன்னாரில் மீண்டும் விடுதலைப்புலிகளின் ஆட்சி நடைபெறுவதாகவும் மீண்டும் விடுதலைப்புலிக ளின் ஆட்சி உருவாகினால் தமிழ் மக்களிற்கான தீர்வு என்ன என்ற கேள்வியைத் தொடுத்துள்ளாா்.
மன்னார் பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தங்கள் விருப்பத் திற்கமைவாக செயற்படுவதாகவும் அவர்களை தடுக்க எந்த நடவடிக்கையும் நடைபெறவில்லை என விமல்வீரவன்ச முழங்கியுள்ளாா்.