"விவாதம் எப்படியானாலும் ஜனவரியில் மாகாண சபை தேர்தல் நடைபெறும்"
"பாராளுமன்றத்தில் நாளை மறு தினம் ஆரம்பமாகவுள்ள விவாதத்தில் எவ் வாறான பதில் கிடைத்தாலும் ஜனவரியில் மாகாண சபை தேர்தலை நடத்து வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளாா்.
தேர்தலை நடத்தும் முறைமை குறித்து கட் சிகளுக்கிடையில் இரு வேறான கருத்துக் கள் நிலவிவரும் நிலையில் ஆயுட்காலம் முடிவடைந்துள்ள மாகாண சபைகளுக் கான தேர்தல்கள் காலம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
புதிய தேர்தல் முறைமை தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கை மீதான விவாதத்தின் பிரகாரம் பழைய முறை யிலோ புதிய முறையிலோ மாகாண சபை தேர்தலை நடத்துவோமெனத் தெரிவித்துள்ளாா்.
மாகாண சபை தேர்தல் தொடர்பில் நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள விவாதம் தொடர்பில் தெளிவுப்படுத்துகையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் மேற்கண்டவாறு தெளிவுப்படுத்துகை யில்,
"அரசியல் கட்சிகளுக்கிடையில் நிலவும் வேறுப்பட்ட கருத்துக்களே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் கால தாமதம் ஏற்பட காரணமாகி யுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை எல்லை நிர்ணய அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளது.
இதில் எவ்வாறான தீர்மானம் கிடைக்கப் பெற்றாலும் கட்சிகளின் ஒத்துழைப்பு டன் ஜனவரியில் மாகாண சபைகளுக்காண தேர்தலை நடத்துவதற்கான நட வடிக்கைகளை வேகமாக முன்னெடுப்போம்.
முன்னர் இருந்தது போன்று பழைய விகிதாசார தேர்தல் முறைமையிலோ அல்லது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றதைப் போன்று புதிய முறைமையிலோ மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும்.
எல்லை நிர்ணய அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் புதிய தேர்தல் முறைமைக்கு சாதகமாக இருக்குமாயின் புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மாறாக விவாத தீர்மானங்கள் புதிய முறைமைக்கு பாதகமாகவும் பழைய முறைமைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமையுமாயின் பழைய முறை யிலேயே தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவ தாகத் தெரிவித்துள்ளாா்.








