விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டு ஆயுதங்களுடன் 7 பேர் கைது - கண்டி.!
கண்டி புஸ்பதான மாவத்தையிலுள்ள இரு மாடிக்கட்டிடம் ஒன்றில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் எனப் பெயரிப்பட்ட ஆயுதம் ஒன்றுடன் மற்றும் சில ஆயுதங்களுடன் சந்தேக நபர்கள் ஏழு பேர் கைதாகியுள்ளனா்.
விசேட பொலிஸ் அதிரடிப்படைப்பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கிகள் மூன்றும், அதற்கான ரவைகளும் வாள் மற்றும் போலியான வாகன இலக்கத்தகடுகள், கைதிகளுக்குப் போடப்படும் கைவிலங்கு சோடி ஒன்று என் பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனா்.
மேற்படி துப்பாக்கிகளில் ‘ரிபிடர் கண்’ வகையைச் சேர்ந்த துப்பாக்கி ஒன்றும் பிஸ்டல் வகை கைத்துப்பாக்கி ஒன்றும் ரிவோல்வர் ஒன்றும் இருந்துள்ளதா கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்துப்பாக்கியில் ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’ என்று தமிழில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதுடன் ரிவோல்வருக்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் 25, ‘ரிபிடர்’ துப்பாக்கிக்கான ரவைகள் 13, போலி வாகன இலக்கத் தகடு 6, கஞ்சா போதைப் பொருள் மற்றும் கைவிலங்கு ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
வீட்டு உடைமையாளர் அரசியல்வாதி ஒருவருடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்ககப்படுகிறது. சந்தேக நபரும் அவரது மகனும் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.
அதேநேரம் மேற்படி வீட்டுக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அதி நவீன உயர் வலுக்கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் முற்றுகையின் போது வீட்டிலிருந்த ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஆறுபேர் சிங்களவர்கள் என்றும் ஒருவர் தமிழர் என்றும் தெரிய வரு கிறது.
கைது செய்யப்பட்டவர்கள் பன்வில, பேராதனை, குருநாகல் முதலான இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
பிரதான சந்தேக நபர் ஏற்கனவே சில குற்றங்களுக்காக தேடப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட ஒரு வர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனா்.
விசேட பொலிஸ் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் மற்றும் மத்திய பிராந்திய பிரதி பொலிஸ் மாஅதிபர் டி.ஆர்.எல். ரணவீர ஆகி யோரின் வழி நடத்தலில் மேற்படி முற்றுகை முன்னெடுக்கப்பட்டதாக பொலி ஸாா் தெரிவித்துள்ளனா்.
பாரியதொரு நடவடிக்கைக்காகவே இவர்கள் இவ்வாறு மேற்படி வீட்டில் தங்கி இருக்கலாமென்ற கோணத்தில் விசாரணைகள் நடை பெறுவது டன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதம் என்பதினால் பெரும் அதிர்ச்சி அடைந்துள் ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








