Breaking News

கிளிநொச்சி கொலைச் சம்பவத்துடனான ஒருவா் கைது.!

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கொலை தொடா்பாக கிளி நொச்சி பொலிஸ் பெரும் குற்றப்பிரிவு விசேட குழுவினரால் ஒருவர் கைதாகி யுள்ளாா். 

கைது செய்யப்பட்டவர் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையைப் பொறுப்பதிகாரி என தெரி விக்கப்பட்டுள்ளது. 

இவர் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் எனவும் பொலி ஸார் குறித்த பெண்ணின் தொலை பேசியின் தரவை பரிசீலனை செய்த பொழுது குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசியில் குறித்த நப ருடனே நீண்ட நேரமாக தொடர்பில் உரையாடியுள்ளாா்.