Breaking News

ஞானசார தேரர் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.!

பொதுபல சோனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரருக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை தொடா்பாக மேன்முறையீடு செய்வதை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிரா கரித்துள்ளது. 

ஞானசார தேரரின் தண்டனையை மேன் முறையீட்டுக்காக மேன்முறையீட்டு நீதி மன்றத்துக்கு வழங்குவதா இல்லையா என்பதை  மேன்முறையீட்டு நீதிமன்றத் தின் தவிசாளரான நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உள்ளிட்ட நிதியரசர்கள் முன்னி லையில் இன்று விசாரணைகள் நடை பெற்ற போதே இவ் விடயம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொதுபலசேனா அமைப் பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதி மன்றத்தால் ஆறு வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளாா்.