Breaking News

நாட்டு மக்களுக்கு ஒா் அறைகூவலாம் - கோத்தபாய ராஜபஷ.!

நாட்டை நேசிக்கும் அனைவரும் எதிர்வரும் 5 ஆம் திகதி கூட்டு எதிரணியினர் ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அறைகூவல் கூவியுள்ளாா். 

கூட்டு எதிரணியின் மக்கள் எழுச்சிப் பேரணி தொடர்பாக விடுத்துள்ள அறி க்கையிலேயே விவரித்துள்ளதுடன் மேலும் அவ் அறிக்கையில் அவர், தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக் கான நாட்டை மீட்ட இராணுவ வீரர் களைத் தொடர்ந்து வேட்டையாடும் வகையில் செயற்பட்டு வரும் தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா். 

ஜனநாயக ஆட்சிமுறையின் அடிப்படைகளை முற்றிலும் சிதைக்கும் வகை யில், நாட்டின் ஜனநாயக உரிமைகளை கேள்விக்குட்படுத்தும் விதமாக அரசா ங்கம் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.