Breaking News

விக்னேஸ்வரன் குழப்பத்திலுள்ளதாக சுமந்திரன் தெரிவிப்பு.!

மனக்குழப்பத்திலுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது மனக்குழப்பத்தை நீக்கி சரியான பதில் ஒன்றை வழங்குவாராயின் அடுத்த மாகாண சபை தேர்தல் குறித்து கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்துவரும் மாகாணசபை தேர்த லில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்தே கேட்ட மேற்கண்டவாறு கூறிய அவர், அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு உறுதியான தீர்மானம் எத னையும் இதுவரை எடுக்கவில்லை. இந் நிலையில் முதலமைச்சர் உரையாற்றும்போது தன் முன் மூன்று தெரிவுகள் முன்னர் இருந்ததாகவும், தற்போது நான்கு தெரிவுகள் உள்ளதா கவும் தெரிவித்துள்ளாா்.