யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு மீட்பு.!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் கோவில் வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மதில் கட்டுவதற்காக அத்தி பார வேலைக்காக மண்ணை வெட்டிய போது கைக்குண்டு காணப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினால் யாழ்ப் பாணப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட் டதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் கைக்குண்டை மீட்பதற்கான நட வடிக்கையை முன்னெடுத்துள்ளனா்.