காற்றாலை விடயத்தில் வடமாகாண அமைச்சு மீது குற்றச்சாட்டு - சி.தவராசா.!
பளை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் காற்றாலை விடயத்தில் வடமாகாண அமைச்சர் சபை தவறிழைத்துள்ளது என்ற குற்றசாட்டு, அரசியலுக்காக ஆர்ப் பரிக்கும் அவச் சொல் என முதலமைச்சர் கூறியது முழு பூசனிக்காயை சோற் றுக்குள் மறைக்கும் செயற்பாடு என வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தூங்குபவனை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போன்று பாசாங்கு செய்ப வனை எழுப்ப முடியாது என்பார்கள். அதேபோல பளைக்காற்றாலை விட யத்தில் முதலமைச்சர் கூறுவது போன்று அத் தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே முதலீட்டுச் சபையின் அனுமதியினைப் பெற்றிருந்தவர்கள் என் பது உண்மை தான்.
ஆனால் அதற்கு மேலதிகமாக மாகாண சபையின் அனுமதியும் பெறவேண்டி இருந்தது.
அந்த அனுமதி என்ன என்பதனை ஐங்கரநேசன் அவர்கள் 19.12.2014 அன்று சபையில்ஆற்றிய உரையிலிருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது.
அவ் உரையில் அவர் தெரிவித்திருப்பது, “இவ் ஒப்பந்தத்தினுடைய பிரகாரம் இருபது வருடங்களிற்கு எங்களுடைய கௌரவ முதலமைச்சர் அக் காணிக் கான அனுமதியினை வழங்கியிருந்தார்.”
முதலமைச்சர் கூறுவது போல் இது தொடர்பாக ஏற்கனவே அனுமதிகள் யாவும் பெற்றிருக்கிறார்களாயின்
காணி அனுமதியினை எதற்காக முதல மைச்சர் அவர்கள் வழங்க வேண்டும்.
தங்கள் கோரும் நிதியை சமூகப் பயன்பாட்டிற்குத் தருவதற்கு முதலீட்டாளர் கள் மறுத்திருப்பார்களே ஆயின் காணி அனுமதியினை வழங்காமல் இருந்தி ருக்கலாம்.
இது 2014ஆம் ஆண்டு பேசப்பட்ட விடயமாக இருந்தாலும் தற்போது ஓர் புதிய தகவல் கிடைத்துள்ளது. என்பதனைமுதலமைச்சர் புரியவில்லையா அல்லது புரியாதது போன்று பாசாங்கு செய்கிறாரா?
2016ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கை தற்போதுதான் எமக்குக் கிடைத்துள்ளது. இக் கணக்காய்வு அறிக்கையில் இவ்விடயம் தொடர்பாக இது வரை அறிந்திராத ஓர் விடயம் தரப்பட்டுள்ளது.
அதாவது 2014 டிசெம்பரிலி ருந்து 2016 டிசெம்பர் வரையான காலப்பகுதிக்குள் அந் நிறுவனம் ரூ.2,933.8 மில்லியனை வருமானமாகப் பெற்றுள்ளது. அதுவும் உற்பத்திச் செலவுகள் இல்லாத வருமானம்.
இதில் மாகாணத்தின் சமூகப் பயன்பாட்டிற்காக வருடமொன்றிற்குக் கிடைக் கும் நிதி ரூபா. 20 மில்லியன்.
இது தொடர்பாகவே கடந்த 30.08.2018 மாகாண சபை அமர்வின் போது விவாதத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிகழ்ச்சி நிரலில் தெளிவாகக் கூறப்பட்டும் இருந்தது.
இந் நிலையில் இவ்விடயத்தினைத் திசை திருப்பி,
இது அரசியலிற்காக ஆர்ப்பரிக் கும் அவச் சொல் எனவும் தாம் பதவியேற்ற காலத்து விடயங்கள் இத்தனை வருடங்களின் பின் தற்போது எழுப்படுகின்றன என்றால் அதன் அர்த்தம் என்ன என்றும் முதலமைச்சர் கூறியிருப்பது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக் கும் செயலாகும்.
இவ்வாறு விடயங்களைத் திரிபுபடுத்திக் கூறிக் கொண்டும், தெரியாதது போல் பாசாங்கு செய்வதனையும் விடுத்து முதலமைச்சர் கடந்த ஐந்து வருட மாகாண சபைச் செயற்பாடுகள் தொடர்பாக தாம் உண்மையாகவும்,
நேர்மை யாகவும் சொல்லுகின்றார் என்றால்,
கேள்வி – பதில் என்ற கோதாவில் அறிக்கைகள் விடுவதைத் தவிர்த்து, ஓர் நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு அவரின் கூற்றுக்களை நிரூபித்துக் காட் டட்டுமென மேலும் தெரிவித்துள்ளாா்.








