இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? களத்தில் நின்ற வைத்தியரின் அனுபவ பகிர்வு!
சில நாட்களுக்கு முன்னர், யூட்யூபில் முள்ளிவாய்க்கால் போர் நாள்களில் அங்கே பணிபுரிந்த மருத்துவர் டி.வரதராஜாவுடைய செவ்வியைப் பார்த்தேன். அது போர் மும்முரமாக நடந்த இறுதி நாட்களில், 2009 மே 15 அன்று எடுக் கப்பட்டது. போர் முடிவுக்கு வருவதற்கு மூன்றே நாள்கள் இருந்தன. முள்ளி வாய்க்காலில் அவர் கொடுத்த கடைசி நேர்காணல்.
அரசின் எச்சரிக்கையை மீறி, போர் நிலவரங்களைக் களத்திலிருந்து பி.பி. சிக்கும், ஐ.நாவுக்கும் அவ்வப்போது தொடர்ந்து அறிவித்தவர் இவர்தான். முள்ளிவாய்க்கால் பேரவலம், மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு, போர்க் குற்றம் பற்றியெல்லாம் பின்னாளில் ஐ.நா பொதுச் சபையில் சாட்சியம் சொன் னவர், ஜெனீவா மனித உரிமை கண்காணிப்பகம் நடத்திய மாநாட்டில் பங் களித்தவர். நோபல் சமாதானப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். எப்படியோ அவரைத் தொடர்பு கொண்டு சந்தித்தேன்.
என்னுடைய வலது கை, குண்டுபட்டு முற்றிலும் செயலிழந்துபோனது. எனக் குத் தகுந்த சிகிச்சையளிக்காமல் தாமதப்படுத்தினார்கள். நான் அரசாங்கத்தின் எதிரியாகவே கருதப்பட்டேன். நான் முல்லைத்தீவு மாவட்டம் பிராந்திய சுகா தாரச் சேவை பணிப்பாளர், அரச மருத்துவர். அப்படியிருந்தும் என்னை புலிக ளின் ஆள் என்று சந்தேகப்பட்டார்கள்.
பேருந்தில் ஏற்றி என்னை வவுனியாவுக்குக் கொண்டு செல்ல முயற்சித்த போது, பஸ்காரன் சொல்கிறான், “இவனுக்கு மேலே பஸ் ஏற்றுவேனே ஒழிய இவனை பஸ்ஸில் ஏற்றமாட்டேன்.” என்னைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் கொலை மிரட்டல் செய்தார்கள்.
பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் என்னை நான்கு வருடம் சிறைக்கு அனுப்பப் போவதாக பயமுறுத்தினார்கள். பின்னர், ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டி, அதில் நான் அன்று வரை கொடுத்த நேர்காணல்கள் எல்லாம் பொய் யானவை என்று சொல்ல வேண்டுமென என்னை நிர்ப்பந்தித்தார்கள்.
அப்படிச் செய்தால் எனக்கு விடுதலை கிடைக்கும். அப்படியே செய்தேன். உயிர் வாழ்ந்தால் தானே உண்மையை உலகத்துக்குச் சொல்லமுடியும். அமெரிக்கத் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரினேன். அவர்களுக்கு என் கதை முழுக்கத் தெரியும். 2011 நவம்பர் மாதம் அமெரிக்கா வந்து சேர்ந்தேன்.
என்ரை பிள்ளைகளைப் பாருங்கோ, என்ரை பிள்ளைகளைப் பாருங்கோ என்று கதறியபடியே இருந்தார். புளியமரத்தின் கீழே உட்கார்ந்திருந்த அவர் மடியின் மீது எட்டு வயதுப் பையனின் தலை கிடந்தது. மூத்தவன் கீழே வெறும் தரை யில் சரிந்து படுத்திருந்தான்.
மூத்த பையனை நான் முதலில் சோதித்தேன். அவன் எப்போதோ இறந்து போயிருந்தான். அந்த அம்மாவிடம் பையன் இறந்து போனதைச் சொன்னேன். ‘ஐயோ, ஐயோ’ எனத் தலையிலடித்துக் கதறினார்.
‘இவனைப் பாருங்கோ’ என்று மடியில் கிடந்த மற்றவனைக் காட்டினார். அவ னுடைய தலையை ஒரு சன்னம் துளைத்து மறுபக்கம் போயிருந்தது. ‘ஒன் றுமே செய்ய முடியாது. சிறிது நேரத்தில் இறந்து விடுவான்’ என்ற கொடூர மான வார்த்தைகளைச் சொன்னேன்.
இப்போது அதை நினைத்துப் பார்க்கும்போது என் மேலேயே வெறுப்பு ஏற்படு கிறது. ஓர் ஆறுதல் வார்த்தைகூடச் சொல்ல நேரமில்லை. ஒவ்வொரு நோயா ளரையும் பார்த்து முடித்த பின்னர் உதவியாளர் ‘அடுத்தது’ (NEXT) எனக் கத்துவார்.
நோயாளி வருவார். அவர் போனதும் ‘அடுத்தது’ எனக் கத்துவார். இப்படி என் வாழ்க்கை இயந்திரமயமாக மாறியிருந்தது.”
சின்ன வயதில் அந்தக் கருகிய உடல்களைப் பார்த்தேன். அந்தக் காட்சி என் மனதில் என்றென்றுமாக நிலைத்துவிட்டது. ராணுவத்தின் பிடியிலிருந்து தப்ப முல்லைத்தீவுக்குக் குடிபெயர்ந்தோம். அங்கே படிப்பை விட்டுவிட்டு ஒரு கடையில் பொட்டலம் கட்டும் வேலை பார்த்தேன்.
நான் ஏற்கெனவே ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந் ததாகச் செய்தி வந்தது. எனக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தம்பலகாமத்துக்கும் முல்லைத்தீவுக்குமாகப் பல தடவை அலைந்தோம்.
இறுதியில் முல்லைத்தீவுப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன். எப்படியும் படித்து ஆளாக வேண்டும் என்ற வெறி என்னுள் இருந்தது. பள்ளிக்கூடத்தில் பகலி லும் அதே பள்ளிக்கூடத்தில் அரிக்கன் லாம்பில் இரவிலும் படித்தேன்.
அங்கேயே பெஞ்சில் தூங்கினேன். அப்படித்தான் 94-ல் மருத்துவப் படிப்புக்குத் தெரிவு செய்யப்பட்டேன். போரினால் பல தடவை படிப்புக்கு இடையூறு ஏற்பட் டாலும் தொடர்ந்து படித்து 2004-ல் மருத்துவப் பட்டம் பெற்றேன்.”
போர் காரணமாக மக்கள் குடிபெயர்ந்தபோது, நானும் அவர்களுடன் மட்டக் கிளப்புக்குப் போனேன். அங்கே எனக்கு எதிரிகள் பெருகிவிட்டார்கள். ராணு வமும் கருணா அணியும் என்னைக் கொல்ல தருணம் பார்த்திருந்தனர். பல தடவை மயிரிழையில் உயிர்தப்பினேன்.
ஒவ்வொரு தடவையும் நான் பிறந்ததற்கான கடமை இன்னும் தீர்க்கப்பட வில்லையென நினைத்துக்கொள்வேன். 2007 டிசம்பரில் முல்லைத்தீவுக்கு என்னை மாற்றினார்கள். அங்கே மே 2009-ல் போர் முடிவுக்கு வரும் வரைக்கும் சேவையாற்றினேன்.”
குண்டுபட்டு துடித்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் போய் எனக்கு அதில் பயிற்சி கிடையாது என்று சொல்ல முடியுமா? ஏதாவது செய்து அவர் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமை இருந்தது.
ஒருவரையும் திருப்பி அனுப்ப முடியாது. இருக்கிற அறிவையும் உபகரணங் களையும் மருந்தையும் வைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய முயல்வோம்.
2009 பிப்ரவரி மாதம். புது மாத்தளன் பாடசாலையில் ஆஸ்பத்திரி ஒன்று தொடங்க முடிவெடுத்தோம். மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், எக்ஸ்ரே, ஆய்வு வசதி ஒன்றுமே கிடையாது. மிக முக்கியமாக ஜெனரேட்டர் இல்லை. ஆகவே, மின்சாரம் கிடையாது.
அப்போது, அந்தக் கர்ப்பிணிப் பெண்ணைக் கொண்டுவந்தார்கள். பிரசவம் ஆகாமல் மூன்று நாள் கடும் அவஸ்தையில் இருந்தார். எப்படியும் சிசுவை வெளியே எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் பிள்ளை செத்துவிடும். தாயும் இறந்துவிடுவார்.
சிசேரியன் அறுவை சிகிச்சை செய்வதற்குத் தேவையான உயரமான கட்டில் இல்லை. சாதாரண கட்டிலில் உடலை வைத்துக் குனிந்துதான் செய்ய வேண் டும். உட்கார்ந்து கொண்டும் செய்ய முடியாது. பெண்ணின் இடுப்புக்குக் கீழே விறைக்கும் ஊசியைச் செலுத்திவிட்டுத் துணிந்து அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தேன்.
ஒருவர் ரோர்ச் லைட்டை அடித்துப் பிடித்தார். குனிந்த நிலையில் வயிறைக் கிழித்து, கர்ப்பப் பையை வெட்டிச் சிசுவை வெளியே எடுத்தேன். சிறிது தாம தித்தாலும் குழந்தை இறந்திருக்கும். நஞ்சுக்கொடியையும் அகற்றிச் சுத்தம் செய்தோம்.
என் முதுகு தாங்கமுடியாமல் வலித்தது. கர்ப்பப்பையைத் தைத்தபோது ரத்தம் பெருகிக்கொண்டேயிருந்தது. ஊசியும் தெரியவில்லை நூலும் தெரிய வில்லை. ஐந்து மணி நேரம் கடந்து விட்டது. என்ன செய்வது என்று புரிய வில்லை.
உதவியாளர் ஒருவர் ‘ஒரு மடிப்பு விட்டுப்போயிருக்கலாம், தடவிப் பாருங் கள்’ என்றார். உண்மைதான் விட்டுப்போன மடிப்பைச் சேர்த்துத் தைத்து ரத்தம் பாய்வதை நிறுத்தினேன். வயிற்றையும் தைத்து முடிக்க 8 மணி நேரம் ஆனது. எட்டு மணி நேரம் குனிந்து வேலை செய்ததால் தாங்க முடியாத முதுகு வலி. தாயையும் சேயையும் காப்பாற்றிய மகிழ்ச்சியில் அது மறைந்துபோனது.
2009 மே மாதம் போர் முடிவுக்கு வருவதற்கு இன்னும் சில நாள்களே இருந்தன. போர் உச்சத்தில் இருந்த காலம் அது. வழக்கம்போல அன்று காலை விடியும் போதே காயப்பட்டவர்களும் இறந்தவர்களும் நோயாளர்களும் அவர்கள் உற வினர்களும் மருத்துவமனையை நிறைக்கத் தொடங்கி விட்டனர்.
ஆஸ்பத்திரி இயங்கியது புளியமரத்தின் கீழ்தான். பாயிலும், வெறும் தரை யிலும், பிளாஸ்டிக் விரிப்பிலும் காயப்பட்டவர்கள் கிடந்தார்கள். 24 மணி நேர மும் ஒரு கூட்டு ஓலம் கிளம்பியபடியே இருந்தது.
மருந்துகள் இல்லை; உபகரணங்கள் இல்லை; உதவி இல்லை. நூற்றுக்கணக் கானவர்கள் வெளியே வரிசையில் நின்றார்கள். மிகவும் ஆபத்து நிலையில் இருந்தவர்களுக்கு மாத்திரம் சேலைன் கொடுக்கப்பட்டது.
அவை புளியமரத்துக் கிளைகளில் தொங்கின. பஞ்சுகூட இல்லை என்றபடி யால் வேட்டியையும், சாரத்தையும் கிழித்து புண்களைத் துடைத்துச் சுத்தமாக் கினோம். இறந்துபோன உடல்களும் காயப்பட்ட உடல்களும் ஒரே வரிசை யில் கிடந்தன.
அறுவை சிகிச்சையில் வெட்டப்பட்ட கால்களும், கைகளும் மூலையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் வாளியில் குவிக்கப்பட்டிருந்தன. அன்று மாலை அவை பிணங்களுடன் புதைக்கப்படும்.
பார்வைக்கு இறைச்சிக் கடைபோலவே ஆஸ்பத்திரி இருந்தது. தரையில் எப்பவும் ரத்தம் ஓடும். ரத்தத்தில் தோய்ந்து என்னுடைய ஒரே சப்பாத்து உக்கி கிழிந்து விட்டதால் கடைசி நாள்களில் நான் வெறும் காலுடனேயே நடந்து வேலை பார்த்தேன்.
55 வயது மதிக்கக்கூடியப் பெண்ணைத் தூக்கிவந்தார்கள். பெரிய காயப்பட்டு முழங்கால் சில்லு வெளியே தெரிந்தது. சதைகள் தொங்கி, ரத்தம் ஒழுகியது. அவருடைய புண்ணைச் சுத்தமாக்கச் சொல்லிவிட்டு அடுத்தவரைப் பார்த் தேன்.
பாதியில் எல்லோரும் வெளியே ஓடினார்கள். மருத்துவர்கள், உதவியாளர்கள், நோயாளர்கள் எல்லோரும் இடித்துப் பிடித்து வெளியேறினார்கள். காரணம், அந்தப் பெண்ணின் முழங்காலுக்குள் ஒரு குண்டு புதைந்துபோய்க் கிடந்தது தான்.
டோர்ச் பாட்டரியிலும் பார்க்கக் கொஞ்சம் பெரிய குண்டு. கொத்துக் குண்டி லிருந்து புறப்பட்டப் பல குண்டுகளில் ஒன்று அவர் காலுக்குள் ஆழமாகப் புதைந்து விட்டது. எந்த நேரமும் அது வெடிக்கலாம்.
அந்த பயத்தில் எல்லோரும் வெளியேறி விட்டார்கள். காயப்பட்டப் பெண் ணுக்கு விசயம் தெரியாது. அவர் கத்தியபடியே கிடந்தார். தெரிந்தாலும் எங்கே ஓடுவது?
அவர் தானே குண்டு. வெளியே நானும் மற்ற மருத்துவர்களும் கூடி ஆலோசித் தோம். முதல் தடவையாக ராணுவம் கொத்துக்குண்டு பாவித்திருப்பதற்கானத் தடயம் எங்களுக்குக் கிடைத்திருந்தது.
மருத்துவர்கள் பயத்தை வெளியே காட்டினால் மருத்துவமனையை மூட வேண்டிவரும். அறுவை சிகிச்சை மூலம் குண்டை அகற்றுவது முடியாத காரி யம். எந்த நேரமும் குண்டு வெடிக்கலாம்.
அப்போது நோயாளியுடன் மருத்துவரும் இறந்து போவார். 17 வயது இளம் பெண் ஒருவர் தான் ஆலோசனை சொன்னார். தொடைக்குக் கீழே, முழங் காலுக்கு மேலே அவருடைய காலை மெதுவாக அதிர்ச்சி தராமல் கம்பி வாளால் அறுத்தோம்.
வெட்டிய காலை வண்டியில் வைத்துத் தள்ளிச் சென்று தூரத்தில் புதைத் தோம். அந்தப் பெண்மணியின் உயிரைக் காப்பாற்றியது பெரிய சாதனையாக அமைந்தது. அவர் சுகமாக இருக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் எனக்குக் கிடைத்திருக்கிறது.”
அதைப்போல ஒரு காட்சியை நான் என் மருத்துவ வாழ்க்கையில் கண்டது கிடையாது. குண்டு வயிற்றைத் துளைத்துப் பின்னர் கர்ப்பப்பையையும் துளைத்து வெளியேறியிருந்தது. குழந்தையின் கை, குண்டுத்துளை வழியாக வெளியே வந்துவிட்டது.
நச்சுக்கொடியும் துவாரத்திலிருந்து வழிந்தது. குழந்தையில் குண்டு பட்டி ருந்ததால் அது இறந்து விட்டது. தாயைக் காப்பாற்றலாம் என்று பார்த்தால், அவருடைய உடலில் பல பாகங்கள் சிதைந்து போயிருந்தன. அவரையும் காப்பாற்ற முடியவில்லை.”
யுத்த வலயத்தில் 3,00,000 பேர் சிக்கியிருந்தார்கள். ஆனால், 80,000 பேர்தான் என அரசாங்கம் ஊடகங்களுக்குத் தொடர்ந்து அறிவித்தது. 2,20,000 ஆள்கள் அழிந் தாலும் கணக்குக் காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. ஆஸ்பத்திரியில் நாங்கள் நோயாளர்களின் விவரங்களைக் கடைசி நாள் வரை பதிவுசெய்யத் தவறவில்லை.
அதிகாலை நேரம் ஒரு பெண்ணைக் கொண்டுவந்து இறக்கினார்கள். நடு இரவு பங்கரிலிருந்து வெளியே சிறுநீர் கழிக்கப் போயிருக்கிறார். அந்த நேரம் RPG (Rocket Propelled Grenade) அதாவது, நுனியில் குண்டு பொருத்திய ரொக்கட் ஆகாயத்திலிருந்து கீழிறங்கி அவருடைய ஒரு தொடையைத் துளைத்து மற் றொரு காலையும் துளைத்து வெளியேற முடியாமல் அப்படியே நின்று விட்டது.
அதிர்ஷ்ட வசமாகக் குண்டு வெடிக்கவில்லை. ஏவுகணையின் நுனியில் பொருத்தியிருந்த குண்டு எந்த நேரமும் வெடிக்கலாம். ரொக்கெட்டை நடுவே வெட்டி இரண்டு பக்கமும் உருவி எடுத்து விட்டுத்தான் சிகிச்சையை மேற் கொள்ளலாம்.
ஆனால், முதலில் குண்டைச் செயலிழக்கச் செய்ய வேண்டும். புலிப்படை வீரர் ஒருவர், செய்தி கேட்டு எங்கேயோயிருந்து வந்து, குண்டைச் செயலிழக்க வைத்தார். அதன் பின்னர் தான் நாங்கள் சிகிச்சையை ஆரம்பிக்க முடிந்தது. பெண்ணும் மரணத்திலிருந்து தப்பினார்.”
“நீங்கள் 2011-ல் அமெரிக்கா புறப்பட்டபோது, இலங்கை அரசு அதைத் தடுக்க முயலவில்லையா? வேறு ஏதாவது விதத்தில் தொந்தரவு கொடுத்ததா?”
“நான் அமெரிக்கா புறப்படுவது அவர்களுக்குத் தெரியாது. முன்னரே தெரிந்தி ருந்தால் எப்படியும் தடுத்திருப் பார்கள். நான் இந்தியா சென்று அங்கேயிருந்து ரகசியமாக அமெரிக்கா வுக்குப் பயணமானேன்.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகப் பேசிவிடுவேன் என்று அவர்களுக்குப் பயமிருந்தது. 2014-ல் இலங்கைக் குற்றப் புலனாய்வுத் துறை எனக்கு ஒரு கடிதம் அனுப்பியது.
அதில், சித்திரவதைக் கூடம் என அறியப்பட்ட கொழும்பு 4-ம் மாடிக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் வரும்படி எனக்கு ஆணை பிறப்பித் திருந்தது. என் தங்கை ‘அவர் இங்கே இல்லை’ என்று சொன்னபோது... அவர்கள் சொன்னார் கள், ‘அவர் இல்லா விட்டால் என்ன? நீ வா... அது போதும்.’ ”
கேள்வி
“உங்களுக்குச் சாவுக்குப் பய மில்லையா?”
பதில்
“சாவுக்குப் பயமில்லாமல் இருக்குமா? நேற்று இரவு நான் வழக்கம்போல பதுங்குக் குழிக்குள் இரவைக் கழித்தேன். சாவு எந்த நேரமும் வரலாம்.
அடுத்த 10 நிமிடத்தில் ஒரு குண்டு விழுந்து நான் இறக்கலாம். இன்று இரவை நான் காண்பேனோ தெரியாது.” இச் செவ்வியைக் கொடுத்த மருத்துவர் வரதராஜாவுக்கு என்ன ஆனது? அவர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து விட் டதாகக் கேள்விப்பட்டேன்.அரசின் எச்சரிக்கையை மீறி, போர் நிலவரங்களைக் களத்திலிருந்து பி.பி. சிக்கும், ஐ.நாவுக்கும் அவ்வப்போது தொடர்ந்து அறிவித்தவர் இவர்தான். முள்ளிவாய்க்கால் பேரவலம், மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு, போர்க் குற்றம் பற்றியெல்லாம் பின்னாளில் ஐ.நா பொதுச் சபையில் சாட்சியம் சொன் னவர், ஜெனீவா மனித உரிமை கண்காணிப்பகம் நடத்திய மாநாட்டில் பங் களித்தவர். நோபல் சமாதானப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். எப்படியோ அவரைத் தொடர்பு கொண்டு சந்தித்தேன்.
முதல் கேள்வியாகக் கேட்டேன். “நீங்கள் முள்ளிவாய்க் காலில் 15 மே 2009-ல் கடைசியாகக் கொடுத்த நேர்காணலுக்குப் பின்னர் என்ன நடந்தது?
நான் சொன்னது போலவே நடந்தது. அந்த நேர்காணல் முடிந்த 10-வது நிமி டத்தில் என்மேல் குண்டுக்காயம் பட்டு அறிவிழந்து நிலத்தில் விழுந்தேன். பெரிய வெளிச்சம்தான் ஞாபகம் இருக்கிறது. என்னை ராணுவம் கைது செய் தது.என்னுடைய வலது கை, குண்டுபட்டு முற்றிலும் செயலிழந்துபோனது. எனக் குத் தகுந்த சிகிச்சையளிக்காமல் தாமதப்படுத்தினார்கள். நான் அரசாங்கத்தின் எதிரியாகவே கருதப்பட்டேன். நான் முல்லைத்தீவு மாவட்டம் பிராந்திய சுகா தாரச் சேவை பணிப்பாளர், அரச மருத்துவர். அப்படியிருந்தும் என்னை புலிக ளின் ஆள் என்று சந்தேகப்பட்டார்கள்.
பேருந்தில் ஏற்றி என்னை வவுனியாவுக்குக் கொண்டு செல்ல முயற்சித்த போது, பஸ்காரன் சொல்கிறான், “இவனுக்கு மேலே பஸ் ஏற்றுவேனே ஒழிய இவனை பஸ்ஸில் ஏற்றமாட்டேன்.” என்னைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் கொலை மிரட்டல் செய்தார்கள்.
பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் என்னை நான்கு வருடம் சிறைக்கு அனுப்பப் போவதாக பயமுறுத்தினார்கள். பின்னர், ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டி, அதில் நான் அன்று வரை கொடுத்த நேர்காணல்கள் எல்லாம் பொய் யானவை என்று சொல்ல வேண்டுமென என்னை நிர்ப்பந்தித்தார்கள்.
அப்படிச் செய்தால் எனக்கு விடுதலை கிடைக்கும். அப்படியே செய்தேன். உயிர் வாழ்ந்தால் தானே உண்மையை உலகத்துக்குச் சொல்லமுடியும். அமெரிக்கத் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரினேன். அவர்களுக்கு என் கதை முழுக்கத் தெரியும். 2011 நவம்பர் மாதம் அமெரிக்கா வந்து சேர்ந்தேன்.
“முள்ளிவாய்க்கால் வாழ்க்கையில் உங்கள் மனதைத் தாக்கிய சம்ப வம் ஒன்றைக் கூறமுடியுமா?”
“ஒன்றல்ல, நிறைய இருக்கின்றன. ஒரு தாய் தன்னுடைய இரண்டு பிள்ளை களுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு வேறு ஒருவரும் இல்லை. அந்த இரண்டு மகன்கள் தான் அவரிடமிருந்த சொத்து. ஒருவனுக்கு 10 வயது, மற்ற வனுக்கு 8 வயது.என்ரை பிள்ளைகளைப் பாருங்கோ, என்ரை பிள்ளைகளைப் பாருங்கோ என்று கதறியபடியே இருந்தார். புளியமரத்தின் கீழே உட்கார்ந்திருந்த அவர் மடியின் மீது எட்டு வயதுப் பையனின் தலை கிடந்தது. மூத்தவன் கீழே வெறும் தரை யில் சரிந்து படுத்திருந்தான்.
மூத்த பையனை நான் முதலில் சோதித்தேன். அவன் எப்போதோ இறந்து போயிருந்தான். அந்த அம்மாவிடம் பையன் இறந்து போனதைச் சொன்னேன். ‘ஐயோ, ஐயோ’ எனத் தலையிலடித்துக் கதறினார்.
‘இவனைப் பாருங்கோ’ என்று மடியில் கிடந்த மற்றவனைக் காட்டினார். அவ னுடைய தலையை ஒரு சன்னம் துளைத்து மறுபக்கம் போயிருந்தது. ‘ஒன் றுமே செய்ய முடியாது. சிறிது நேரத்தில் இறந்து விடுவான்’ என்ற கொடூர மான வார்த்தைகளைச் சொன்னேன்.
இப்போது அதை நினைத்துப் பார்க்கும்போது என் மேலேயே வெறுப்பு ஏற்படு கிறது. ஓர் ஆறுதல் வார்த்தைகூடச் சொல்ல நேரமில்லை. ஒவ்வொரு நோயா ளரையும் பார்த்து முடித்த பின்னர் உதவியாளர் ‘அடுத்தது’ (NEXT) எனக் கத்துவார்.
நோயாளி வருவார். அவர் போனதும் ‘அடுத்தது’ எனக் கத்துவார். இப்படி என் வாழ்க்கை இயந்திரமயமாக மாறியிருந்தது.”
“உங்கள் இளமைக்காலம் பற்றிக் கூறுங்கள்?”
ஒரு வார்த்தையில் சொல்வதானால் ‘அலைச்சல்தான்’. 1975-ல் தம்பலகாமம் எனும் ஊரில் பிறந்தேன். எனக்கு 10 வயது நடந்தபோது, ராணுவம் ஊரைச் சுற்றிவளைத்தது; சிலரைக் கைதுசெய்து ஒரு கடையினுள் அடைத்து அதற்குத் தீ வைத்தது.சின்ன வயதில் அந்தக் கருகிய உடல்களைப் பார்த்தேன். அந்தக் காட்சி என் மனதில் என்றென்றுமாக நிலைத்துவிட்டது. ராணுவத்தின் பிடியிலிருந்து தப்ப முல்லைத்தீவுக்குக் குடிபெயர்ந்தோம். அங்கே படிப்பை விட்டுவிட்டு ஒரு கடையில் பொட்டலம் கட்டும் வேலை பார்த்தேன்.
நான் ஏற்கெனவே ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந் ததாகச் செய்தி வந்தது. எனக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தம்பலகாமத்துக்கும் முல்லைத்தீவுக்குமாகப் பல தடவை அலைந்தோம்.
இறுதியில் முல்லைத்தீவுப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன். எப்படியும் படித்து ஆளாக வேண்டும் என்ற வெறி என்னுள் இருந்தது. பள்ளிக்கூடத்தில் பகலி லும் அதே பள்ளிக்கூடத்தில் அரிக்கன் லாம்பில் இரவிலும் படித்தேன்.
அங்கேயே பெஞ்சில் தூங்கினேன். அப்படித்தான் 94-ல் மருத்துவப் படிப்புக்குத் தெரிவு செய்யப்பட்டேன். போரினால் பல தடவை படிப்புக்கு இடையூறு ஏற்பட் டாலும் தொடர்ந்து படித்து 2004-ல் மருத்துவப் பட்டம் பெற்றேன்.”
“உங்கள் மருத்துவச் சேவை முதலில் எங்கே தொடங்கியது?”
“திரிகோணமலையில் உள்ள ஒரு சின்ன ஊர் ஈச்சிலம்பற்று. 70,000 பேர் அங்கே மருத்துவ வசதியில்லாமல் கஷ்டப்பட்டார்கள். தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, ஆகவே ஒரு மருத்துவரும் அங்கே போகச் சம்மதிக்கவில்லை. நானாகவே போய் அந்த ஊருக்கு மாற்றல் கேட்டு மருத்துவராகப் போனேன். எப்படியாவது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என நினைத்தேன்.போர் காரணமாக மக்கள் குடிபெயர்ந்தபோது, நானும் அவர்களுடன் மட்டக் கிளப்புக்குப் போனேன். அங்கே எனக்கு எதிரிகள் பெருகிவிட்டார்கள். ராணு வமும் கருணா அணியும் என்னைக் கொல்ல தருணம் பார்த்திருந்தனர். பல தடவை மயிரிழையில் உயிர்தப்பினேன்.
ஒவ்வொரு தடவையும் நான் பிறந்ததற்கான கடமை இன்னும் தீர்க்கப்பட வில்லையென நினைத்துக்கொள்வேன். 2007 டிசம்பரில் முல்லைத்தீவுக்கு என்னை மாற்றினார்கள். அங்கே மே 2009-ல் போர் முடிவுக்கு வரும் வரைக்கும் சேவையாற்றினேன்.”
“முள்ளிவாய்க்காலில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததா கச் சொல்லியிருந்தீர்கள். அதிலெல்லாம் உங்களுக்குப் பயி ற்சி இருந்ததா?”
“மருத்துவக் கல்லூரியில் எல்லாவிதமான நோய்களுக்கும் காயங்களுக்கும் சிகிச்சை முறை கற்பித்திருந்தார்கள். பல துறைகளிலும் அடிப்படை அறிவை வளர்த்துக் கொண்டேன்.குண்டுபட்டு துடித்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் போய் எனக்கு அதில் பயிற்சி கிடையாது என்று சொல்ல முடியுமா? ஏதாவது செய்து அவர் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமை இருந்தது.
ஒருவரையும் திருப்பி அனுப்ப முடியாது. இருக்கிற அறிவையும் உபகரணங் களையும் மருந்தையும் வைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய முயல்வோம்.
2009 பிப்ரவரி மாதம். புது மாத்தளன் பாடசாலையில் ஆஸ்பத்திரி ஒன்று தொடங்க முடிவெடுத்தோம். மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், எக்ஸ்ரே, ஆய்வு வசதி ஒன்றுமே கிடையாது. மிக முக்கியமாக ஜெனரேட்டர் இல்லை. ஆகவே, மின்சாரம் கிடையாது.
அப்போது, அந்தக் கர்ப்பிணிப் பெண்ணைக் கொண்டுவந்தார்கள். பிரசவம் ஆகாமல் மூன்று நாள் கடும் அவஸ்தையில் இருந்தார். எப்படியும் சிசுவை வெளியே எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் பிள்ளை செத்துவிடும். தாயும் இறந்துவிடுவார்.
சிசேரியன் அறுவை சிகிச்சை செய்வதற்குத் தேவையான உயரமான கட்டில் இல்லை. சாதாரண கட்டிலில் உடலை வைத்துக் குனிந்துதான் செய்ய வேண் டும். உட்கார்ந்து கொண்டும் செய்ய முடியாது. பெண்ணின் இடுப்புக்குக் கீழே விறைக்கும் ஊசியைச் செலுத்திவிட்டுத் துணிந்து அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தேன்.
ஒருவர் ரோர்ச் லைட்டை அடித்துப் பிடித்தார். குனிந்த நிலையில் வயிறைக் கிழித்து, கர்ப்பப் பையை வெட்டிச் சிசுவை வெளியே எடுத்தேன். சிறிது தாம தித்தாலும் குழந்தை இறந்திருக்கும். நஞ்சுக்கொடியையும் அகற்றிச் சுத்தம் செய்தோம்.
என் முதுகு தாங்கமுடியாமல் வலித்தது. கர்ப்பப்பையைத் தைத்தபோது ரத்தம் பெருகிக்கொண்டேயிருந்தது. ஊசியும் தெரியவில்லை நூலும் தெரிய வில்லை. ஐந்து மணி நேரம் கடந்து விட்டது. என்ன செய்வது என்று புரிய வில்லை.
உதவியாளர் ஒருவர் ‘ஒரு மடிப்பு விட்டுப்போயிருக்கலாம், தடவிப் பாருங் கள்’ என்றார். உண்மைதான் விட்டுப்போன மடிப்பைச் சேர்த்துத் தைத்து ரத்தம் பாய்வதை நிறுத்தினேன். வயிற்றையும் தைத்து முடிக்க 8 மணி நேரம் ஆனது. எட்டு மணி நேரம் குனிந்து வேலை செய்ததால் தாங்க முடியாத முதுகு வலி. தாயையும் சேயையும் காப்பாற்றிய மகிழ்ச்சியில் அது மறைந்துபோனது.
“போரில் ராணுவம் கொத்துக்குண்டு பாவித்ததா?”
“இலங்கை ராணுவம் (Cluster Bombs) கொத்துக் குண்டுகள் பாவிப்பதாக செய் திகள் வந்தன. ஏற்கெனவே அவை தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனால், எங்க ளிடம் அதற்கான ஆதாரம் கிடையாது.2009 மே மாதம் போர் முடிவுக்கு வருவதற்கு இன்னும் சில நாள்களே இருந்தன. போர் உச்சத்தில் இருந்த காலம் அது. வழக்கம்போல அன்று காலை விடியும் போதே காயப்பட்டவர்களும் இறந்தவர்களும் நோயாளர்களும் அவர்கள் உற வினர்களும் மருத்துவமனையை நிறைக்கத் தொடங்கி விட்டனர்.
ஆஸ்பத்திரி இயங்கியது புளியமரத்தின் கீழ்தான். பாயிலும், வெறும் தரை யிலும், பிளாஸ்டிக் விரிப்பிலும் காயப்பட்டவர்கள் கிடந்தார்கள். 24 மணி நேர மும் ஒரு கூட்டு ஓலம் கிளம்பியபடியே இருந்தது.
மருந்துகள் இல்லை; உபகரணங்கள் இல்லை; உதவி இல்லை. நூற்றுக்கணக் கானவர்கள் வெளியே வரிசையில் நின்றார்கள். மிகவும் ஆபத்து நிலையில் இருந்தவர்களுக்கு மாத்திரம் சேலைன் கொடுக்கப்பட்டது.
அவை புளியமரத்துக் கிளைகளில் தொங்கின. பஞ்சுகூட இல்லை என்றபடி யால் வேட்டியையும், சாரத்தையும் கிழித்து புண்களைத் துடைத்துச் சுத்தமாக் கினோம். இறந்துபோன உடல்களும் காயப்பட்ட உடல்களும் ஒரே வரிசை யில் கிடந்தன.
அறுவை சிகிச்சையில் வெட்டப்பட்ட கால்களும், கைகளும் மூலையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் வாளியில் குவிக்கப்பட்டிருந்தன. அன்று மாலை அவை பிணங்களுடன் புதைக்கப்படும்.
பார்வைக்கு இறைச்சிக் கடைபோலவே ஆஸ்பத்திரி இருந்தது. தரையில் எப்பவும் ரத்தம் ஓடும். ரத்தத்தில் தோய்ந்து என்னுடைய ஒரே சப்பாத்து உக்கி கிழிந்து விட்டதால் கடைசி நாள்களில் நான் வெறும் காலுடனேயே நடந்து வேலை பார்த்தேன்.
55 வயது மதிக்கக்கூடியப் பெண்ணைத் தூக்கிவந்தார்கள். பெரிய காயப்பட்டு முழங்கால் சில்லு வெளியே தெரிந்தது. சதைகள் தொங்கி, ரத்தம் ஒழுகியது. அவருடைய புண்ணைச் சுத்தமாக்கச் சொல்லிவிட்டு அடுத்தவரைப் பார்த் தேன்.
பாதியில் எல்லோரும் வெளியே ஓடினார்கள். மருத்துவர்கள், உதவியாளர்கள், நோயாளர்கள் எல்லோரும் இடித்துப் பிடித்து வெளியேறினார்கள். காரணம், அந்தப் பெண்ணின் முழங்காலுக்குள் ஒரு குண்டு புதைந்துபோய்க் கிடந்தது தான்.
டோர்ச் பாட்டரியிலும் பார்க்கக் கொஞ்சம் பெரிய குண்டு. கொத்துக் குண்டி லிருந்து புறப்பட்டப் பல குண்டுகளில் ஒன்று அவர் காலுக்குள் ஆழமாகப் புதைந்து விட்டது. எந்த நேரமும் அது வெடிக்கலாம்.
அந்த பயத்தில் எல்லோரும் வெளியேறி விட்டார்கள். காயப்பட்டப் பெண் ணுக்கு விசயம் தெரியாது. அவர் கத்தியபடியே கிடந்தார். தெரிந்தாலும் எங்கே ஓடுவது?
அவர் தானே குண்டு. வெளியே நானும் மற்ற மருத்துவர்களும் கூடி ஆலோசித் தோம். முதல் தடவையாக ராணுவம் கொத்துக்குண்டு பாவித்திருப்பதற்கானத் தடயம் எங்களுக்குக் கிடைத்திருந்தது.
மருத்துவர்கள் பயத்தை வெளியே காட்டினால் மருத்துவமனையை மூட வேண்டிவரும். அறுவை சிகிச்சை மூலம் குண்டை அகற்றுவது முடியாத காரி யம். எந்த நேரமும் குண்டு வெடிக்கலாம்.
அப்போது நோயாளியுடன் மருத்துவரும் இறந்து போவார். 17 வயது இளம் பெண் ஒருவர் தான் ஆலோசனை சொன்னார். தொடைக்குக் கீழே, முழங் காலுக்கு மேலே அவருடைய காலை மெதுவாக அதிர்ச்சி தராமல் கம்பி வாளால் அறுத்தோம்.
வெட்டிய காலை வண்டியில் வைத்துத் தள்ளிச் சென்று தூரத்தில் புதைத் தோம். அந்தப் பெண்மணியின் உயிரைக் காப்பாற்றியது பெரிய சாதனையாக அமைந்தது. அவர் சுகமாக இருக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் எனக்குக் கிடைத்திருக்கிறது.”
“உங்களுக்குச் சவால் கொடுத்த சம்பவங்கள் ஏதாவது இருக் கின்றனவா?”
“மருத்துவ வாழ்க்கை முழுக்கச் சவால்தான். எல்லா அறுவை சிகிச்சைகளும் வெற்றியிலேயே முடிந்தன என்று சொல்ல முடியாது. ஆகக் குறைந்த வசதி கள், ஆகக் குறைந்த உபகரணங்கள் ஆகக் குறைந்த மருந்துகள் இவற்றை வைத்துக்கொண்டு சமாளித்ததுதான் பெரிய விடயம். ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கொண்டுவந்தார்கள்.அதைப்போல ஒரு காட்சியை நான் என் மருத்துவ வாழ்க்கையில் கண்டது கிடையாது. குண்டு வயிற்றைத் துளைத்துப் பின்னர் கர்ப்பப்பையையும் துளைத்து வெளியேறியிருந்தது. குழந்தையின் கை, குண்டுத்துளை வழியாக வெளியே வந்துவிட்டது.
நச்சுக்கொடியும் துவாரத்திலிருந்து வழிந்தது. குழந்தையில் குண்டு பட்டி ருந்ததால் அது இறந்து விட்டது. தாயைக் காப்பாற்றலாம் என்று பார்த்தால், அவருடைய உடலில் பல பாகங்கள் சிதைந்து போயிருந்தன. அவரையும் காப்பாற்ற முடியவில்லை.”
“புலிகளுடன் உங்கள் உறவு எப்படி இருந்தது?”
“மருத்துவரீதியாக அவ்வப்போது உதவினார்கள். போர்முகத்தில் நான் வேலை செய்ததால், பல விநோதமான சம்பவங்கள் நேர்ந்தன. ஒரு நாளைக்கு 200 பேரைப் பார்க்க வேண்டும். 18 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தாலும் முடிவுக்கு வருவதில்லை.யுத்த வலயத்தில் 3,00,000 பேர் சிக்கியிருந்தார்கள். ஆனால், 80,000 பேர்தான் என அரசாங்கம் ஊடகங்களுக்குத் தொடர்ந்து அறிவித்தது. 2,20,000 ஆள்கள் அழிந் தாலும் கணக்குக் காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. ஆஸ்பத்திரியில் நாங்கள் நோயாளர்களின் விவரங்களைக் கடைசி நாள் வரை பதிவுசெய்யத் தவறவில்லை.
அதிகாலை நேரம் ஒரு பெண்ணைக் கொண்டுவந்து இறக்கினார்கள். நடு இரவு பங்கரிலிருந்து வெளியே சிறுநீர் கழிக்கப் போயிருக்கிறார். அந்த நேரம் RPG (Rocket Propelled Grenade) அதாவது, நுனியில் குண்டு பொருத்திய ரொக்கட் ஆகாயத்திலிருந்து கீழிறங்கி அவருடைய ஒரு தொடையைத் துளைத்து மற் றொரு காலையும் துளைத்து வெளியேற முடியாமல் அப்படியே நின்று விட்டது.
அதிர்ஷ்ட வசமாகக் குண்டு வெடிக்கவில்லை. ஏவுகணையின் நுனியில் பொருத்தியிருந்த குண்டு எந்த நேரமும் வெடிக்கலாம். ரொக்கெட்டை நடுவே வெட்டி இரண்டு பக்கமும் உருவி எடுத்து விட்டுத்தான் சிகிச்சையை மேற் கொள்ளலாம்.
ஆனால், முதலில் குண்டைச் செயலிழக்கச் செய்ய வேண்டும். புலிப்படை வீரர் ஒருவர், செய்தி கேட்டு எங்கேயோயிருந்து வந்து, குண்டைச் செயலிழக்க வைத்தார். அதன் பின்னர் தான் நாங்கள் சிகிச்சையை ஆரம்பிக்க முடிந்தது. பெண்ணும் மரணத்திலிருந்து தப்பினார்.”
“நீங்கள் 2011-ல் அமெரிக்கா புறப்பட்டபோது, இலங்கை அரசு அதைத் தடுக்க முயலவில்லையா? வேறு ஏதாவது விதத்தில் தொந்தரவு கொடுத்ததா?”
“நான் அமெரிக்கா புறப்படுவது அவர்களுக்குத் தெரியாது. முன்னரே தெரிந்தி ருந்தால் எப்படியும் தடுத்திருப் பார்கள். நான் இந்தியா சென்று அங்கேயிருந்து ரகசியமாக அமெரிக்கா வுக்குப் பயணமானேன்.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகப் பேசிவிடுவேன் என்று அவர்களுக்குப் பயமிருந்தது. 2014-ல் இலங்கைக் குற்றப் புலனாய்வுத் துறை எனக்கு ஒரு கடிதம் அனுப்பியது.
அதில், சித்திரவதைக் கூடம் என அறியப்பட்ட கொழும்பு 4-ம் மாடிக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் வரும்படி எனக்கு ஆணை பிறப்பித் திருந்தது. என் தங்கை ‘அவர் இங்கே இல்லை’ என்று சொன்னபோது... அவர்கள் சொன்னார் கள், ‘அவர் இல்லா விட்டால் என்ன? நீ வா... அது போதும்.’ ”
“இப்போது அமெரிக்காவில் என்ன செய்கிறீர்கள்?”
“அமெரிக்காவில் திரும்பவும் மருத்துவம் படித்து, பரீட்சைகள் எழுதி, எல்லாச் சோதனையும் பாஸ் பண்ணினேன். மருத்துவப் பணிக்குப் பல ஆஸ்பத்தி ரிகளுக்கு விண்ணப்பித்திருக்கிறேன். அன்றாடம் சாப்பாட்டுக்குத் தொழில் நுட்ப உதவியாளர் வேலை செய்கிறேன். தினம் நல்ல செய்தி வருகிறதா என்று குறுஞ்செய்தியையும் மின்னஞ்சல்களையும் வீட்டுத் தபால் பெட்டியையும் பார்க்கிறேன். அடுத்தது என்னவென்று காத்திருக்கிறேன்.”
-நன்றி-
அ.முத்துலிங்கம்
- நன்றி ஐ.பி.சி இணையத்திற்கு -








