Breaking News

பிரேமதாசவின் கனவு நிஜமாகுமென்கிறாா் - அகிலவிராஜ்

எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி பதவி ஐக்­கிய தேசிய கட்­சிக்கே உரித் தாகும். முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் கனவு இன்று நிறை­வே­றி­னாலும் அது முழுமை பெற­வில்லையென ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர் அகிலவிராஜ் காரி­ய­வசம் தெரி­வித்துள்ளாா். 

ஐக்­கிய தேசிய கட்­சியின் 72 ஆவது வருட நிறைவு நிகழ்வு நேற்று கட்­சி யின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தா வில் பிர­தமர் தலை­மையில் நடை பெற்­றபோது கலந்துகொண்டு கருத்­து­ரைக்கும் போதே இவ்வாறு தெரிவித் துள்ளாா். 

 மேலும் தெரிவிக்கையில்....,

பல போராட்­டங்­களின் மத்­தியில் ஐக்­கிய தேசிய கட்சி 72 வரு­டங்­களை கடந்­துள்­ளது. ஆகவே மஹிந்த தரப்­பினர் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக மேற்­கொள்ளும் போலி­யான போராட்­டங்கள் ஒன்றும் எமக்கு சவா­லானதல்ல. 

2015 ஆம் ஆண்டில் இருந்தே கூட்டு எதி­ர­ணி­யினர் போராட்­டங்­களை மாத்­தி­ரமே மேற்­கொண்­டுள்­ளனர். அதில் எவ்­வித மாற்­றங்­களும் இடம்பெற­வில்லை. மக்கள் சக்தி என்ற பெயரில் மது­வினை வழங்கி மேற்­கொண்ட போராட்­டங்கள் ஜன­நா­யக போராட்­ட­மாகாது.

நேற்று முன்­தினம் நடைபெற்ற போராட்டம் கேலிக்­ கூத்­தாக்­கப்­பட்­டுள்­ளது. பலர் வீதியில் மது­போ­தையில் புரண்­டுள்­ளனர். அர­சாங்கம் ஜன­நா­யக ரீதியில் போராட்­டங்­களை நடத்த அனு­மதி அளித்­துள்­ளது. 

போராட்­டங்­களின் பொழுது பலர் அநா­க­ரிக­மாக செயற்­பட்­டுள்­ள­மை­யினை சமூக வலைத்­த­ளங்­களில் காணக்கூடி­ய­தாக உள்­ளது. தேசிய அர­சாங்­கத்தின் சிறந்த கொள்­கையின் கீழ் முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரேமதாசவின் கனவுகள் பாரியளவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

ஆனாலும் அது முழுமை பெறவில்லை. அவரது கனவு முழுமை பெற வேண் டுமாயின் ஐக்கிய தேசிய கட்சியினர் அரச பலம் பொருந்தியவர்களாக தோற் றம் பெற வேண்டும். ஆகவே இவரது கனவு வெகுவிரைவில் நனவாக் கப்படும். 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவி எமக்கே உரித்தாகுமெனத் தெரிவித்துள் ளாா்.