நீதிமன்றில் ஆஜரானார் முதலமைச்சா்.!
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
வடக்கு மாகாண போக்குவரத்து, உள் ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டுமென நீதிமன் றம் வழங்கிய உத்தரவை நடை முறைப்படுத்தத் தவறியதற்காக நீதி மன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று நீதிமன்றில் ஆஜராகியுள் ளார்.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வடமாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவொன்றை பரிசீலித்த போதே மேன் முறையீட்டு நீதிமன்றம் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச் சர்களான அனந்தி சசிதரன், கே.சிவநேசன் ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகு மாறு கடந்த மாதம் 08 ஆம் திகதி ஆணையிட்டுள்ளது. இதனை முன்னிட்டு விக்னேஸ்வரன் இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளாா்.








