Breaking News

கைவி­லங்­கு­டன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குடும்பஸ்தர்.!

கன­க­ரா­யன்­கு­ளம் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யின் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னார் என குற்­றஞ்­சாட்டப்­ப­டும் நபா் ஒருவா் கிளி­நொச்சி வைத்திய சாலையில் சிகிச்சை கைவி­லங்­கு­டன் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கின்றாா்.

மனி­தா­பி­மா­ன­மற்ற முறை­யி­லான இச் செயற்­பாடு உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகாண முன்­னாள் சுகா­தார அமைச்­ச­ரும், உறுப்­பி­ன­ரு­மான ப.சத்­தி­ய­லிங் ­கம் தெரி­வித்­துள்ளாா். 

வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் கருத்­துத் தெரி­விக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவிக்கையில் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யின் தாக்­கு­த­லில் காய­ம­டைந்­துள்ள குடும்­பத் தலை­வர் வைத்தியசாலை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். 

அவரை நான் நேரில் சென்று பார்­வை­யிட்­டேன். பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி, குடும்­பத் தலை­வர் மீது அவ­ரது காணி­யில் வைத்­துத் தாக்­கு­தல் நடத்­தி­யி­ருக்­கி­றார். பின்­னர் வாக­னத்­தில் பொலிஸ் நிலை­யம் அழைத்­துச் சென்று அங்­கும் வைத்­தும் தாக்­கி­யுள்­ளார். 

காய­ம­டைந்தவர் குடி­போ­தை­யில் வீழ்ந்து கிடந்­தார் என்று தெரி­வித்து மாங்­கு­ளம் வைத்தியசாலையில் சேர்க்­கப் பொலி­ஸார் முயற்­சித்­துள்­ள­னர். தாக்­கு­த­லுக்கு இலக்­கா­ன­வ­ரின் மனைவி அவர் குடிப்­ப­தில்லையெனத் தெரிவித்துள் ளாா்.

இதன் பின்­னர் பொலி­ஸார் கிளி­நொச்சி வைத்தியாசலையில் சேர்த்­துள்­ள­னர். கிளி­நொச்சி வைத்தியசாலையில் அவ­ரது கை இரண்­டும் விலங்­கி­டப்­பட்­டுள்­ளது. தலைக்கு மேலாக கையை வைத்து வைத்தியசாலை கட்­டி­லு­டன் பிணை த்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

இது மனி­தா­பி­மா­ன­மற்ற செயற்­பாடு இச் செயற்­பாடு உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட நட­வ­டிக்கை எடுக்­கவேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.