Breaking News

புழல் சிறையிலிருக்கும் இலங்கையர் மீதான பரபரப்புத் தகவல்!

தமிழ் நாட்டின் புழல் சிறைக்குள் இருந்தவாறு நவீன தொலைபேசிகளை பயன் படுத்தி சிறைக்கைதிகள் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் உரையாடியுள்ள தாக பரபரப்புத் தகவல்கள் பரவியுள்ளன. 

சென்னை புழல் சிறையில் பாரிய குற் றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ் வதாக தகவல்கள் வெளியாகியுள் ளன. 

புழல் சிறையிலுள்ள கைதிகள் விலை உயர்ந்த தொலைபேசிகள், ஆடைகள், உணவு வகைகள் போன்ற வற்றுடன் வாழ்வதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. புழல்சிறை குறித்த இந்த குற்றச்சாட்டை நிருபிக்கும் வகையில் அவர்கள் எடுத்துக்கொண்ட செல்பி படங்களும் வெளியாகியுள்ளன. 

இதனைத் தொடர்ந்து புழல்சிறையில் உள்ள சிறைக்கைதிகள் குறிப்பாக தீவிர வாதிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் வட்ஸ் அப் மூலம் உரையாடியுள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பங்களா தேசம் மலேசியா வளைகுடா நாடுகளிற்கு 100 தடவைகளிற்கு மேல் இவர்கள் வட்ஸ் அப் மூலம் உரையாடியுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் கஞ்சா கடத்தல் போலி நாணயதாள்கள் பரிவர்த்தனை குறித்து தொல பேசி யில் உரையாடியுள்ளனர். 

இலங்கையை சேர்ந்த ஒருவரும் அவரது நண்பருமே வெளிநாடுகளிற்கு வட்ஸ் அப் மூலம் அதிகம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங் கையை சேர்ந்த நபர் சிறையிலிருந்த படி பங்களாதேசில் உள்ள சர்வதேச கடத்தல் கும்பலுடன் வட்ஸ் அப்பில் உரையாடியுள்ளாதாக பரபரப்புத் தகவல் கள் பரவியுள்ளன.