Breaking News

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு.!

இலங்கை மின்சார சபையை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலை யாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழு வுக்கு நிதி செலுத்தாத விவகாரம் தொடர்பாக, இவ்வுத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதுடன் பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவினால் தாக்கல் செய் யப்பட்ட மனு நேற்று (வெள்ளிக் கிழமை) நீதிமன்றத்தில் விசாரணை க்கு பதிவாகியுள்ளது. 

மேலும் இலங்கை மின்சார சபையை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது.  மின் உற்பத்தி, மின்விநியோகம் என்பவற்றுக்காக வருடாந்தம் மின்சார சபை பொதுப் பயன் பாடுகள் ஆணைக்குழுவிற்கு நிதி செலுத்த வேண்டும். 

ஆனால், மின்சார சபை கடந்த 2018ஆம் ஆண்டு, 19 கோடியே 20 இலட்சத்து 600 ரூபாய் வரிப்பணத்தை செலுத்த தவறியுள்ளதாக கூறியே பொதுப் பயன்பாடு கள் ஆணைக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடுத்துள்ளது.