ஜனாதிபதியின் பிறந்த நாள் இன்று.!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது 67 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். அவர் 1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி கம்பஹா யாகொடையில் பிறந்துள்ளாா்.
தோபவெவ மகா வித்தியாலயம் மற் றும் பொலன்னறுவை ரோயல் கல் லூரிகளில் கல்வி கற்ற அவர் கம்யூ னிட்ஸ் கட்சியில் தனது அரசியல் பணிகளை தொடர்ந்தார்.
பிற்பட்ட காலத்தில் ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியில் இணைந்து 1989 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவா கியதுடன் விவசாயம், மகாவலி அபி விருத்தி மற்றும் சுகாதாரம் ஆகிய அமைச்சு பொறுப்புகளை வகித்த அவர், 2001 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செய லாளராக பதவி வகித்து வந்துள்ளாா்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிரணி யின் பொது வேட்பாளராக களமிறங்கி இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றாா்.
இந் நிலையில் ஜனாதிபதியின் பிறந்த தினமான இன்று உலகத் தலைவர்க ளும் இலங்கையின் அரசியல் பிரமுகர்களும் தமது வாழ்த்துக்களை தெரி வித்துள்ளனா்.