கோத்தா விசேட நீதிமன்றில் ஆஜரானாா்.!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முவர் அடங்கிய விசேட நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை இன்று ஆஜராகுமாறு கடந்த 27 ஆம் திகதி நீதிமன்றம் அழைப் பாணை விடுத்தது.
இதன் பிரகாரமே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று மன்றில் ஆஜராகியுள்ளார். டி.ஏ.ராஜபக்ஷ ஞாப கார்த்த அருங்காட்சியக நிர்மாணப் பணிகளின் போது அரச பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்திற்காகவே இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.








