Breaking News

புகையிரதத் திணைக்களம் மீது குற்றச்சாட்டு - சிவசக்தி ஆனந்தன்

வடக்கின் புகையிரதத் கடவைகளில் தொடர்ச்சியான விபத்துக்களுக்கு புகை யிரதத் திணைக்களத்தின் அசமந்தமே காரணம் என வன்னி மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளாா். 

வவுனியா, ஒமந்தை, பன்றிகெய்த குளம் பகுதியில் பாதுகாப்பற்ற புகை யிரதத் கடவையை கடந்து சென்ற கார் ஒன்றின் மீது யாழில் இருந்து வந்த புகையிரதம் மோதியதில் நான்கு பெண்கள் மரணமடைந்திருந் ததுடன், இருவர் படு காயமடைந்துள் ளனா்.

 மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் அண்மைக்காலமாக புகையிரத விபத்துக்கள் அதிகரித்துள்ளன. அதி லும் குறிப்பாக வவுனியா ஓமந்தைக்கும், கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட பகுதி களிலுள்ள புகையிரதக் கடவைகளில் பல விபத்துக்கள் நடைபெற்று உயி ரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இப் பகுதிகளில் உள்ள பல புகையிரதக் கடவைகள் பாதுகாப்பற்ற கடவை களாக இருப்பதுடன், புகையிரதக் கடவைகளில் கடவை காப்பாளர்கள் நியமிக் கப்படவில்லை.

இதன் ஊடாக பயணிப்போர் புகையிரதத்தில் சிக்குண்டு விபத்துக்குள்ளா கின்றனர். தற்போது வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து கூட பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் பயணித்த காரே விபத்தில் சிக்கியுள்ளது.

குறித்த பகுதி ஊடாக பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், பொது மக்கள் எனப் பலரும் தினமும் பலர் பயணிக்கும் நிலையில் குறித்த பகுதியில் பாது காப்பான புகையிரதக் கடவை ஒன்றை அமைக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கையிட்டு வந்ததுடன், அதனை நானும் புகையிரதத் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன்.

குறிப்பாக கடந்த 3 ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத் திருந்தேன்.

இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் புகையிரத திணைக்கள அதி காரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் புகையிரதத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படாத நிலையில் குறித்த விபத்து நடை பெற்றுள்ளது.

இவ் விபத்தில் மரணித்த உறவுகளுக்கு எனது அஞ்சலிகளைத் தெரிவித்து கொள்வதுடன், இவ்வாறான விபத்துக்களை இனிவரும் காலங்களில் தடுக்கும் வகையில் புகையிரதத் திணைக்களம் பாதுகாப்பான புகையிரதக் கடவை களை அமைப்பதுடன், புகையிரதக் கடவைகளுக்கு நிரந்தமாக கடவைக் காப்பாளர்களையும் நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ஏ9 வீதியிலும் அண்மைகாலமாக விபத்துக்கள் அதிகரித்து உயிரிழப்புக்கள் ஏற் படுகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸ் திணைக்களம் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சுக்கள் புதிய திட்டங்களை வகுத்து அதனை நடை முறைப்படுத்தி அநாவசியமான உயிரிழப்புக்களை தவிர்க்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.