Breaking News

சிவசேன் அமைப்பின் தலைவருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைப்பு.!

சிவசேன் அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கொழும்புக்கு நாளை (18) விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிவசேனை அமைப்பை ஆரம்பித் தமை தொடர்பான தகவல்கள், பதிவு தொடர்பான ஆதாரங்கள், வங்கிக் கணக்கு தொடர்பான விவரம், வெளி நாட்டுப் பயணம் தொடர்பான விவரங் கள் குறித்து விசாரணைகளை மேற் கொள்ளும் முகமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால், சச்சிதானந்த னுக்கு கடந்த 16 ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளது.