Breaking News

யாழில் பெரும் பதற்றம்! தென்னிலங்கை மீனவா்கள் கைது.!

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் அத்து மீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிப் பிடித்ததிதனால் அப் பகுதி யில் பெரும் பதற்றம் நிலவியுள்ள நிலையில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள் ளனர்.
வடமராட்சி கிழக்கின் பல இடங்களி லும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெருமளவிலான மீனவர்கள் அத்து மீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட் டுள்ளனா்.

இதனால் பல பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல் வளமும் அழிக்கப்படுவதால் இவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டங் களும் நடைபெற்றுள்ளன.

இதனையடுத்து கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினர்களும் அந்த மீனவர்களை வெளியேற்றுவது கூறியிருந்தார் போதிலும் அங்கு தொடர்ந்தும் அவர்கள் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு வடமராட்சி கிழக்கின் தாளையடிப் பகுதியில் தங்கியிருந்து சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்களும் எட்டு மீனவர்கள் வட மராட்சி கடற்பரப்பில் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட போது வடமராட்சி மீன வர்களும் மடக்கி பிடிக்கப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனா்.

மேலும் அப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனை யடுத்து அங்கு வந்த பருத்தித்துறை பொலிஸாரும் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை கைது செய்து தாம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்ல முற் பட்ட போதும் அதற்கு அப்பகுதி மீனவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.