Breaking News

ஜோசப்பரராஜசிங்கம் தொடா்பான கொலை வழக்கு இழுத்தடிப்பு.!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர் பான வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி வரை மட் டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுள்ளது. 

வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவுபெற்ற நிலையில் இறுதியாக வாய்மூல சமர்ப்பணங்களுக்காக வழ க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பான வழக்கு விசாரணை மட் டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஐ.எம். இஸ்ஸடீன் முன் னிலையில் நேற்று விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது.

இறுதிக்கட்ட சாட்சியங்களாக மேல் நீதிமன்ற பதிவாளர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோரிடம் நேற்று விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டன. விளக்கமறியலில் உள்ள இரண்டாம் சந்தேக நபரான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்த ராஜா அனுப் பிய கடிதம் தொடர்பில் நேற்று விசாரணைகள் நடைபெற்றன.

கடந்த ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் அடிப்படையிலான சாட்சியங்கள் நிறைவடைந்துள்ள நிலை யில் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி வாக்கு மூலம் வெளியாக வுள்ளது.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித் தலை வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாள ரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக் கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம். கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளனா்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டி ருந்த போது தேவாலயத்திற்குள் பிரவேசித்த இனந் தெரியாத துப்பாக்கிதாரி களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா்.