Breaking News

2019 ஆண்டின் உலக் கிண்ணம் இலங்கையில்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொட­ருக்­கான வெற்றிக் கிண்ணம் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் 2019 ஆம் ஆண்டு இங்­கி­லா ந்தில் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண் ணத் தொடரை முன்­னிட்டு வெற்றிக் கிண்ணம் உலகம் முழுக்க எடுத்­துச்­செல்­லப்­ப­டு­கின்­றது.

அதன் ஒரு கட்­ட­மாக உலகக் கிண் ணம் மேற் ­கிந்­தியத் தீவு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு கொண்­டு­ வ­ரப்­பட்­டது. இலங்­கைக்கு கொண்­டு­ வ­ரப்­பட்­டுள்ள உலகக் கிண்­ணத்தை வர­வேற்கும் நிகழ்வு நேற்று சுதந்­திர சதுக்­கத்தில் நடை­பெற்­றது.

விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பைஸர் முஸ்­தபா, இலங்­கைக்கு உல கக் கிண்­ணத்தை வென்­று­ கொ­டுத்த முன்னாள் அணித் தலைவர் அர்­ஜுன ரண­துங்க, இலங்கை கட்­பு­ல­னற்ற கிரி க்கெட் அணி வீரர்கள், பாட­சாலை மாண­வர்கள் மற்றும் ஓரிரு தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆகியோர் கலந்­து சிறப்பித்துள்ளனா்.