Breaking News

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பலி ; கிளிநொச்சியில்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவனொருவன் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலை யில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சி செல்வாநகரில் நடைபெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் 8 வயதுடைய சத்தியசீலன் மதுசன் என்ற சிறுவனே உயி ரிழந்தவராவார். குறித்த சிறுவன் பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளை யெனவும் ஆரம்பத்தில் குறித்த சிறு வன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட வரெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறுவன் உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப் பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.