Breaking News

சம்பந்தனை நாடாளுமன்றுக்கு அழைத்த ஐ.நா பிரதிநிதி!

ஜனாதிபதி இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதி நிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சித் தலை வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவருமான இரா. சம்பந் தனை சந்தித்துக் கலந்துரையாடியுள் ளார். இச் சந்திப்பு இன்று நாடாளுமன் றத்தில் நடைபெற்றுள்ளதுடன் தற் போது நாட்டில் நிலவும் அரசியல் நில வரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை யின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர் இன்று முற்பகல் ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித் துக் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் இதன் போது ஜனாதிபதி ஐ.நா பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தியதுடன், அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் அரசியலமைப்பின் பிரகாரமே மேற்கொள்ளப்பட் டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.