யாழில் ஆலயங்கள், வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் கைது.!
யாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்களை நேற்று மாலை மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.
மேலும் தெரிய வருவதாவது,
திருநெல்வேலி பகுதியில் 2 ஆலயங்களிலும் 3 வீடு களில் கடந்த இரு நாட் களில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. குறித்த கொள் ளைகளில் ஈடுபட்ட கொள்ளையர்களின் தெளிவான அடையாளங்களுடன் கூடிய சீ.சீ.ரி.வி ஆதாரங்கள் மீட் கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் குறித்த கொள்ளையர்களை பிடிப்ப தற்காக இளைஞர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் சந் தேகத்திற்கிடமான முறையில் 4 பேர் நேற்று மாலை நட மாடியுள்ளனர்.
குறித்த நபர்களை மறித்த இளைஞர்கள் விசாரித்ததுடன் அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டபோது கோவிலில் மீட்கப்பட்ட பித்தளை பொருட் களை இளைஞர்கள் மீட்டுள்ளனா்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பான சீ.சீ.ரி.வி காட்சி களை பார்த்து பிடிபட்டவர்களே கொள்ளையர்கள் என அடையாளம் கண்டதை தொடர்ந்து கொள்ளை யர்களை இளைஞர்கள் பிடித்து கட்டுவதற்கு முயற் சித்தபோது இருவர் தப்பி ஓடியுள்ளனர் எனினும் இரு வர் அகப்பட்டுள்ளனா்.
அவர்கள் இருவரையும் நையபுடைத்த இளைஞர்கள் குறித்த நபர்களை மின் கம்பத்துடன் கட்டிவைத்தனர். பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம் பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த கொள்ளை யர்களை தாம் இதற்கு முன்னரும் கைது செய்ததா கவும் குறித்த நபர்கள் பிணையில் வந்து மீண்டும் மீண்டும் கொள்ளையில் ஈடுபடுவதாக கூறி கொள்ளையர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி பகுதியில் 2 ஆலயங்களிலும் 3 வீடு களில் கடந்த இரு நாட் களில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. குறித்த கொள் ளைகளில் ஈடுபட்ட கொள்ளையர்களின் தெளிவான அடையாளங்களுடன் கூடிய சீ.சீ.ரி.வி ஆதாரங்கள் மீட் கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் குறித்த கொள்ளையர்களை பிடிப்ப தற்காக இளைஞர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் சந் தேகத்திற்கிடமான முறையில் 4 பேர் நேற்று மாலை நட மாடியுள்ளனர்.
குறித்த நபர்களை மறித்த இளைஞர்கள் விசாரித்ததுடன் அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டபோது கோவிலில் மீட்கப்பட்ட பித்தளை பொருட் களை இளைஞர்கள் மீட்டுள்ளனா்.
அவர்கள் இருவரையும் நையபுடைத்த இளைஞர்கள் குறித்த நபர்களை மின் கம்பத்துடன் கட்டிவைத்தனர். பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம் பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த கொள்ளை யர்களை தாம் இதற்கு முன்னரும் கைது செய்ததா கவும் குறித்த நபர்கள் பிணையில் வந்து மீண்டும் மீண்டும் கொள்ளையில் ஈடுபடுவதாக கூறி கொள்ளையர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.