Breaking News

ஜனாதிபதி கொலை முயற்சியில் புதிய திருப்பு முனையில் நாமல்!

ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என் பது தொடர்பில், ஊழல் எதிர்ப்பு படையணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமார மற்றுமொரு தகவலை வெளியிட்டுள்ளார். அம்பாறையில் நடை பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளாா்.

மேலும் தெரிவிக்கையில்,



நாலக சில்வா, மாகந்துரே மதுஸை பயன்படுத்தி ஜனாதிபதியைக் கொலை செய்ய முயற்சித்தார். இத ற்கு சரத் பொன்சேகாவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பணிப்புரை விடுத்தனர் என்பது தமக்கு தெரியுமெனத் தெரிவித்துள்ளாா்.

அதனைவிட இவ் விடயத்தில் ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டிய தீர்மானங் களை மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டார். நாலக சில்வாவின் தனிப்பட்ட தேவைகளுக்காக இதனை மேற்கொள்ளவில்லை.

அதனால் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினாலும் பரவாயில்லை. எனி னும் உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என் பதே தமது கோரிக்கை எனவும் நாமல் குமார தெரிவித்துள்ளாா்.