Breaking News

எம்.ஏ.சுமந்திரனிற்கு இராஜினாமா காலம் கனிந்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன்.!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.ஏ. சுமந்திரன் இராஜினாமா செய்வதற்கான காலம் கனிந்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனது இல்லத் தில் கடந்த 15 ஆம் திகதி நடத்திய ஊடக சந்திப்பில், புதிய அரசியலமை ப்பு உருவாக்கப் பணிகள் தோல்வி அடையும் நிலைமை ஏற்படுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வீர்களா என ஊடக வியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதில் அளித்திருந்த எம்.எ.சுமந்திரன், அரசியலமைப்பு பணிகளை நம்பி க்கையுடன் முன்னெடுப்பதாகவும் அது தோல்வி அடையுமாயின் நாடாளு மன் றப் பதவியை இராஜினாமா செய்வேன் என உறுதியாகத் தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத் தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலை யில், தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக் குறுதியை நிறைவேற்றும் காலம் எம்.ஏ. சுமந்திரனுக்கு வந்துள்ளதாக வவுனி யாவில் நடைபெற்ற தோட்ட தொழிலா ளர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்ட சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.