Breaking News

நாம் ஆட்சிக்கு வந்தால்.. அமைச்சர்கள் கூடாரத்தை எச்சரிக்கும் மு.க ஸ்டாலின்.!

நாங்கள் (திமுக) ஆட்சிக்கு வந்த மறுநொடி ஊழல் புரிந்த அமைச்சர்கள் யாவரும் சிறைக்கு செல்ல வேண்டியிருக்குமென எச்சரித்துள்ளார் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின்.

நாகை மாவட்டத்தில் திருமண நிக ழ்வு ஒன்றில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்து ஆவேசமாக தெரிவித்துள்ளாா்.

மேலும் தெரிவிக்கையில்...,

"தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்திருப்பது செல்லு மென நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்திட வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம்.

நமது இக் கோரிக்கையைத் தான் உயர் நீதிமன்றம் அரசுக்கும், தேர்தல் ஆணை யத்திற்கும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அரசு தரப்பினர் தேர்தலை சந்திக்க அச்சப்படுகின்றனர்" எனத் தெரிவித்துள்ளாா்.

மேலும், " ஆட்சி அதிகாரத்தில் நீங்கள் இருக்கிற காரணத்தினால் ( ஓபிஎஸ், தங்கமணி, வேலுமணி) இன்று பொதுவெளியில் சுதந்திரமாக உலா வரலாம். ஆனால், திமுக ஆட்சி அமைந்த மறுநொடி நீங்கள் சிறைக்கம்பிகளை எண்ண வேண்டியிருக்கும். அவ்வளவு ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளோம்" என எச் சரிக்கை விடுத்துள்ளாா்.