Breaking News

வாள் முனையில் முகமூடிக் கொள்ளையர்களினால் கொள்ளையடிப்பு - யாழில்

யாழ்ப்பாணம், மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனா். 

இன்று அதிகாலை 12.00 மணியளவில் வாள்களுடன் முகத்தை துணியினால்  மூடியவாறு சுமார் பத்துக்கும் அதிகமா னவர் மதில் பாய்ந்து வீட்டிற்குள் நுழை ந்துள்ளனர்.

வீட்டின் யன்னல் ஊடாக வாள்களை காட்டி கதவைத் திறக்குமாறு அச்சுறுத்தியுள்ளனர். இதன்போது வீட்டிலிருந் தவர்கள் கூக்குரலிட கதவினை உடைத்துக்கொண்டு குறித்த கும்பல் உள் நுழைந்துள்ளது.

ஆறு பேர் வீட்டிற்குள் நுழைந்து வாள்களை காட்டி அச்சுறுத்தி தாலிக்கொடி உட்பட சுமார் 18 பவுண் நகைகள், 4000 ரூபா ரொக்கப்பணம் என்பவற்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரம் வரை வீட்டில் நின்ற கொள்ளையர்கள் கூக்குரல் கேட்டு வந்த அயலவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர். இக்கொள்ளை தொடர் பாக கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து ஒரு மணி நேரத் திற்குப் பின் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன் னெடுத்துள்ளனர்.