Breaking News

மஹிந்த பொறுப்பேற்றால் எதிர்விளைவினை சந்திக்க நேரிடும் - லக்ஷ்மன் பியதாச.!

பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறுகிய நோக்கங்களை மையப்படுத்தி பொறுப்பேற்றால் அவருக்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள னா்.

ஏனெனில் அவர் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் காணப்படுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளாா். 

எவ்வாறு இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப் புரிமையினை ஒருபோதும் துறக்கமாட்டார். ஏனெனில் அவரது அரசியல் பய ணம் இக்கட்சியில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

மேலும் குறிப்பிடுகையில்,

சிலவேளை எவரும் எதிர்பாராத வகையில் பொதுஜன பெரமுனவின் தலை மைத்துவத்தினை மஹிந்த பொறுப்பேற்றால் பாரிய எதிர் விளைவுகளை சந் திக்க நேரிடும். இவ்விடயம் கட்சி ரீதியில் பல தீர்க்கமான தீர்மானங்கள் எடுக் கப்படும்.

இதன் காரணமாக அவரது தரப்பினரும் பல சவால்களை எதிர்கொள்ள நேரி டும். கூட்டிணைந்த எதிர்க் கட்சியினர் இதுபோன்ற பல விடயங்களை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.