Breaking News

சுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகிட சிறிசேனவை கோரவுள்ள- சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே

அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேற வேண்டுமென்ற எழுத்து மூல மான கோரிக்கையை அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்ற 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்வைக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்ற 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் ஒருமித்த தீர்மான த்தை எடுத்துள்ளதாகத் தெரிவித் துள்ள அவர் தங்கள் கோரிக்கையை எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் வழங்கப்போவதாக தெரிவித்துள் ளார்.

கடந்த சில நாட்களாக 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் தீவி ரமாக ஆராய்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாதென தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகாவிட்டால் கட்சி யின் மத்திய குழு கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தீர்க்கமான முடிவை நாங் கள் எடுக்க வேண்டியிருக்குமெனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியிடம் இது குறித்து தெளிவுபடுத்தவுள்ளோமெனத் தெரிவித்துள் ளார்