Breaking News

ரோ கொலை முயற்சிப்பதாக சிறிசேன தெரிவிக்கவில்லை - ராஜித.!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்ய இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோ முயற்சிப்பதாக வெளியாகியுள்ள தகவல்களை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன நிராகரித்துள்ளார். 

ரோ தன்னை கொல்ல முயற்சிப்பதாக ஜனாதிபதி ஒருபோதும் தெரிவிக்க வில்லையென அமைச்சரவை முடிவு களை அறிவிக்கும் ஊடக வியலாளர் மாநாட்டில் ராஜித சேனாரட்ன தெரி வித்துள்ளார். இவ்வாறான தகவல் களை வெளியிட்ட ஊடகங்களை அவர் கடுமையாக சாடியுள்ளார்.

ஜனாதிபதி சிறிசேன தன்னை கொல்வதற்கான சதிமுயற்சியில் ரோவிற்கு தொடர்பிருப்பதாக சிலர் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

எனினும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்திய செய்தியாளர் ஒருவர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் சிலர் ஜனா திபதி ரோவை குற்றம் சாட்டியதாக தன்னிடம் தெரிவித்துள்ளதாகத் தெரிவித் துள்ளார்.

எனினும் இதனை நிராகரித்துள்ள அமைச்சர் ராஜிதசேனாரட்ண ஏனையவர் கள் அவ்வாறு தெரிவிப்பதாகவே சிறிசேன தெரிவித்துள்ளாா்.

இதேவேளை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனை தொடர் பாக ஜனாதிபதியும் பிரதமரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வெளி யான செய்திகளையும் அமைச்சர் நிராகரித்துள்ளார்.

இது குறித்த அமைச்சரவை பத்திரம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை சிறிசேன மோடியை தான் சந்தித்தவேளை ஆராய்ந்த விடயங்களையே தெரி வித்தார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.