Breaking News

என்னுடனான பிரச்சினையால் மக்களை நெருக்கடிக்குள் தள்ளுவது முறையற்றது - ரணில்

என்னுடனான தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக நாட்டை அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிக்குள் தள்ளுவது முறையானதல்ல. ஜனாதிபதி தனது சட்ட விரோதமான நடவடிக்கையினால் மக்களை நெருக்கடிக்குள் தள்ளக் கூடாதென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரி வித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் தன்னால் பணியாற்ற முடியாதிருந்ததாகவும் அவரின் பொருளாதாரக் கொள்கை கள் நிலைமைக்குப் பொருத்தமான தாக இருக்கவில்லையென ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற கூட்டத்தில தெரிவித்தி ருந்தமை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.