Breaking News

நாடாளுமன்றில் இன்று பொது மக்களுக்கு தடை விதிப்பு.!

சிறிலங்காவின் நாடாளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ள நிலையில் நாடா ளுமன்றில் பொது மக்களுக்கென ஒதுக்கப்பட்ட கலரியில் இன்று தடை விதிக் கப்பட்டதன்படி கலரியிலிருந்து நாடாளுமன்றச் செயற்பாடுகளை அவதானிப் பதற்கான சந்தர்ப்பம் இன்றைய தினம் பொதுமக்களுக்கு இல்லையெனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சீரின்மையினாலும் நாடாளு மன்றிலும் கடும் குழப்பங்கள் நிலவியுள் ளன. கடந்த வெள்ளிக்கிழமை நாடாளு மன்ற அமர்வுகளின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களால் கதிரைகள், புத்தகங்கள் மற்றும் மிளகாய்த்தூள் என்பன கொண்டு தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.

எனவ இன்றைய தினமும் நாடாளுமன்றம் கூடவுள்ளதால் ஏதேனும் அசம்பா விதங்கள் நேரக்கூடும் என்பதனாலேயே நாடாளுமன்றக் கலரியில் பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.