Breaking News

கதிரையிலிருந்து தவறி வீழ்ந்த பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு.!

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட பிரித்தானியப் பிரஜையொருவர் கதி ரையிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரி வித்துள்ளனர்.

70 வயதுடைய பிளாக் ஸ்டீவ் ரொபட் பட்ரிக் என்பவரே இவ்வாறு மரண மடைந்துள்ளார். வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலான பகுதியுள்ள தனியார் ஹோட்டலொன்றின் உண வகத்தின் அமர்ந்திருந்த வேளை யிலேயே குறித்த நபர் கதிரையிலி ருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரித்தானிய தூதரகத்தினூடாக குறித்த நபரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.