Breaking News

ஜனாதிபதி கொலை சதி முயற்சி - நாமலிடம் நாளை விசாரணை.!

மிக முக்கிய பிரமுகர்களை படுகொலை செய்வதற்கான சதி முயற்சி தொடா் பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாளை குற்றப்புலனாய்வுப் பிரி வினருக்கு வாக்குமூலம் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளாா். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்வதற்கான சதி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை வழங்கிய வாக்கு மூலங்கள் குறித்து விசாரணை செய் வதற்காகவே சிஐடியினர் தன்னை அழைத்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய பிரஜை தெரிவித்த விடயங்கள் தொடர்பில் நாமல் ராஜபக்ச விமல் வீரவன்ச விமல்வீரவன்சவின் மனைவி ஆகியோரை விசாரணை செய்வதற் காக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுள்ளனர்.