Breaking News

நாட்டை இந்தியாவிடம் ஈடுவைக்க வேண்டிய தேவை எமக்கில்லை - ரணில்.!

இந்தியாவிடம் பாரிய நிதி உதவியை பெற்றுக்கொள்கின்றோம் என்பதற் காக இந்தியாவிற்கு திருகோணமலை துறைமுகத்தையோ, மத்தள விமான நிலையத்தையோ,காங்கேசன்துறை துறைமுகத்தையோ வழங்க தயாராக இல்லை, சார்க் நாடுகளின் நாணய பண்டமாற்றின் ஊடாக நடைபெறும் கொடுக்கல் வாங்கல்களுக்காக அடகுவைக்க வேண்டிய தேவை எமக்கில்லை யென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்துள்ளாா்.

பாராளுமன்றத்தில் இன்று குற்றவி யல் கருமங்கள் பரஸ்பர உதவியளித் தல், ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகள் அறவிடுதல் சட்டமூலம் குறித்த விவாதம் முன்னெடுக்க முன் னர் பிரதமர் விசேட உரை  நடைபெற் றுள்ளது.

இவ்வேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய வேளை விமல் வீரவன்ச எம்.பி, ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய போதே பிரதமர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளாா்.