Breaking News

தேர்தலுக்கு ஆயத்தமாகுங்கள் மைத்திரி அதிரடி.!

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலுக்கு தயாரா குமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களிடம் ஜனா திபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். நான்கு மாகாணங்களைச் சேர்ந்த சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப் பாளர்களை அவசரமாக கொழும் பிற்கு அழைத்த ஜனாதிபதி, கலந் துரையாடலில் ஈடுபட்டுள்ளாா்.

வடமத்திய, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் தொகுதி அமைப் பாளர்களே இவ்வாறு அழைக்கப்பட்டதுடன் கலந்துரையாடலின் போது கட்சி யின் சீர்திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதன் போது மாகாணசபை தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததுடன் அடுத்து வரும் சில தினங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கும் நிலையில், ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள் ளது.