Breaking News

தமிழ் மக்களின் துயரங்கள் நீங்க பிரார்த்திக்கும் சம்பந்தன்.!

சம்பந்தனிடமிருந்து தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில், இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.

மனித வாழ்வின் அடிப்படை தேவை களை பூர்த்தி செய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த உழவர்தின திருநாளில், தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாமலும் குடியேறிய நிலங்களில் பயிர்செய்ய முடியாமலும் உள்ள எமது மக்களின் துயரங்கள் நீங்க வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மேலும் சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாய மான அரசியல் தீர்வின் ஊடாக எம்மக்களின் எதிர்காலம் வளமுடைய இந் நன்னாளில் பிரார்த்தனை செய்வோமாக.

எமது மக்களின் நிலங்கள் அதிக விளைச்சலையும் செழிப்பையும் தந்து எம் மக்கள் தன்னிறைவுள்ள சமூகமாக மீண்டெழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இரா.சம்பந்தன் தலைவர் -
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.