Breaking News

பாகுபாடற்ற தேசத்தை நிர்ணயிப்பதே எமது குறிக்கோள் - டக்ளஸ் தேவானந்தா.!

நாம் வர்த்தக நோக்குடனோ அன்றி சுயநல தேவைகளுக்காகவோ அரசியல் செய்வது இல்லை எமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற  வேண்டு மென்ற குறிக்கோளுடனேயே எமது அரசியல் செயற்பாடுகளை நாம் முன்னெ டுத்து வருகின்றோமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை மகாசபை நிர்வாகத் தினர் சந்தித்து சமகால அரசியல் தொடர்பிலான கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

எமது மக்களின் வாக்குகளை வெவ் வேறு சுயநலக் கதைகளை கூறி போலித் தேசியம் பேசி தேர்தல் காலங்களில் உதவிகளையும் பணத்தையும் கொடுத்து உங்களது வாக்குகளை வாங்கும் தரப்பினரால் எப்படி மக்களது நலன்களை முன்னிறுத்தி பணியாற்ற முடியுமெனச் சிந்திக்க வேண்டும்.

அந்த வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது மக்களின் அரசியல் அபி விருத்தி உள்ளிட்ட அபிலாஷைகளை பெற்றுக்கொடுக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறான முன்னெடுப்புக்களுக்கு நாம் என்றும் ஆத ரவுப்பலம் கொடுக்க தயாராகவே உள்ளோமெனத் தெரிவித்துள்ளாா்.