Breaking News

எதிர்க்கட்சிகளின் கூட்டணி விடயத்தில் அரசாங்கம் அச்சம் - வாசுதேவ நாணயக்கார.!

எதிர்க் கட்சிகளின் பாரிய கூட்டணி தொடர்பில் அரசாங்கம் அச்சம் அடைந் துள்ளதினால் அதனை குழப்ப பிரதமர் ரணில் விக்ரமசிங்க சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளாா்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந் திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரி விக்கையிலேயே இவ்வாறு தெரிவித் துள்ளாா்.

எதிர்க்கட்சிகள் இணைந்து அமைக்க விருக்கும் கூட்டணி தொடர்பில் அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. அதனை எப்படியாவது குழப்ப வேண்டும் என்பதற்காக பல்வேறு சதித்திட்டங்கள் நடை பெறுகின்றன.

குறிப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க எமது கூட்டணியில் இணையவிருக்  கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிலரை குழப்பி வருகின்றார். அத்துடன் ஊட கங்களும் எமது கூட்டணி தொடர்பாக பாரிய பிரசாரம் ஒன்றை மேற்கொண் டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.