Breaking News

இலங்கைக்கும் போலாந்துக்குமிடையில் ஒத்துழைப்பை நல்குவதாக - போலாந்து ஜனாதிபதி

இலங்கை மற்றும் போலாந்துக்கிடையில் அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களை அதிகரிப்பது தொடர்பில் தமது நாடு முழுமையான ஒத் துழைப்பை வழங்குமென போலாந்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களை அதிகரிப்பது தொடர்பில் போலாந்து ஜனாதிபதி என்ரிஸ்டூ டோ (Andrezej Duda)க்கும் அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் சி.ஏ. எச்.எம். விஜயரட்னவுக் குமிடையில் கலந்துரையாடல் நடை பெற்றுள்ளது.

போலாந்துக்கான இலங்கை தூதுவர் தனது தூதுவர் நியமனம் தொடர்பான சான்றிதழை போலாந்து ஜனாதிபதியிடம் கையளித்த போது இக் கலந்துரை யாடல் நடைபெற்றுள்ளது.

போலாந்து ஜனாதிபதி மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார். இலங்கை வரும் போலாந்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வருடாந்தம் அதிக ரித்து வருவதாகவும் இலங்கைத் தூதுவர் இதன்போது என்ரிஸ்டூ டோவிடம் தெரிவித்துள்ளாா்.