Breaking News

மட்டக்களப்பு கிரான் வீதியில் கைக்குழந்தை மீட்பு.! (காணொளி)

மட்டக்களப்பு கிரான் வீதியில் கைவிடப்பட்ட இரண்டு மாத குழந்தையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று(20) இரவு கிரான் பிரதேச செய லகப்பிரிவுக்குற்பட்ட கிரான் மத்திய வித்தியாலயத்திற்கு முன்பாக வீதி யோரத்தில் இரண்டு மாதங்கள் மதி க்க கூடிய குழந்தை ஒன்று கைவிடப் பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட் டுள்ளது.

குறித்த பெண் குழந்தையை அப்பிரதேச கிராம உத்தியோகஸ்தர் வாழைச் சேனை பொலிஸாரின் உதவியுடன் மீட்டு வாழைச்சேனை வைத்தியசாலை யில் அனுமதித்துள்ளனர்.

இது யாருடைய குழந்தை? இதனை விட்டுச் சென்றவர்கள் யார் உள்ளிட்ட விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனா்.