Breaking News

இரட்டை வேட நிலைப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்திய தமிழரசுக்கட்சி


சர்வதேச விசாரணை வேண்டும் காணாமல்
ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும் என இன்று பல்கலைகழக மாணவர்கள் நடாத்திய போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டார்.

“நீதிக்காய் எழுவோம்” மக்கள் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஆரம்பமாகியிருந்தது. இந்தப் பேரணிக்காக தாயகத்தின் பலபகுதிகளிலிமிருந்து மக்கள் வந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்ககூடாது என்ற முக்கிய அம்சமான பேரணிக்காக வந்திருந்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை அரசிற்கு அவகாசம் கொடுக்கவேண்டுமென வலியுறுத்திவரும் ஒரே கட்சியான தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து இரட்டைவேட நிலைப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.