Breaking News

பொசன் பூரணையை முன்னிட்டு பாடசாலைகளில் விசேட செயற்றிட்டம்

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பாடசாலைகளை மையப்படுத்தி விசேட செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு அனைத்து பாடசாலை அதிபர் களுக்கும் கல்வி அமைச்சு அறிவித்தல் வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் பிரிவெனாக்கள், பௌத்த பாடசாலைகள் உள்ளிட்ட பிற கல்வி நிறுவனங்களிலும் சிறப்பு செயற்றிட்டங்களை முன்னெடுக்கு மாறு அனைத்து பிரதேச செயலாளர் மற்றும் கல்வி வலயங்களுக்கு அறி வுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை முதல் பாடசாலை சூழல் மற்றும் வகுப்பறைகளை பௌத்த கொடி களைக் கொண்டு அலங்கரிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சி னால் வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி பாடசாலை அதிபர்கள் செயற் பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் பாடசாலை மாணவர்கள் பொசன் தினத்தை முன்னிட்டு தங்களது வீடுகளையும் அலங்கரிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொசன் பூரணை தினத்தில் மாணவர்கள் பெற்றோர், பெரியோரின் ஆசியைப் பெற்றுக்கொள்ளுமாறும் கல்வி அமைச்சு வௌியிட் டுள்ள சுற்றரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.