Breaking News

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை இரத்த பூமியாக மாறியுள்ளது - பேராயர் ஆதங்கம்.!

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை இரத்த பூமியாக மாறியுள்ளது. இதே நிலைமை தொடருமானால் நாடு நீண்ட நாட்களுக்கு நிலைத்திக்காது என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளாா். 

தற்போது நாட்டில் ஊழல், மோசடிகள் இல்லாத இடம் இல்லை. சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவரும் சட்டத்தை மீறுவதற்கு பழக் கப்பட்டுள்ளனர். சுதந்திரத்தின் பின்னர் இலங்கை இரத்த பூமியாகவே உள்ளது. இதற்கான காரணம் இலங்கை அரசியலில் காணப்படும் ஒழுக்க மின்னையாகும்.

எனவே அரசியல்வாதிகள் தான் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். ஆரம்பப் பிரிவு மாணவர்களிடம் ஒழுக்கத்தைப் பற்றி பேசுவதில் பயனில்லை. அக் மீமன பிரதேசத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.