Breaking News

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - கல்முனையில் பதற்றம்!

கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகம் தரமுயர்துவது தொடர்பான பிரதமருடனான கலந்து ரையாடலின் பின்னர் பிரதமரின் பணிப்புரைக்கு அமைய பொது நிர் வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச் சரினால் வழங்கப்பட்ட தீர்வு பொதி க்கு உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள் ளோரும் மக்களும் பலத்த எதிர்ப் பினை தெரிவித்ததுடன் பொதியினை கொண்டு வந்தவர்கள் தப்பியோட்டி யுள்ளதுடன் தீர்வு வரும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடருமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்முனை வடக்கு தமிழ்பிரிவு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக் கோரி நடைபெற்று வரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் பிரதேச செயலகம் முன்பாக இன்று ஐந்தாம் நாளாகவும் நடைபெற்று வருகின்றது.

இந் நிலையில் இன்று பி.ப அமைச்சர் மனோகணேசன், தமிழத் தேசியக் கூட் டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அமைச்சர் தயாகமகே ஆகியோர் பிரதமர் தலைமையில் தமிழத்தேசியக் கூட்டமைப்புடனான கலந்துரையாடலின் ஊடாக எடுக்கப்பட்ட தீர்வினை அறிவிப்பதற்காக சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதன் போது முதலில் மனோகணேசன் மக்கள் முன்னிலையில் உரையாற் றிய பின்னர் தாங்கள் கொண்டுவந்திருக்கும் தீர்வினை சுமந்திரன் அவர்கள் அறிவிப்பார் என தெரிவித்திருந்தார் இதற்கமைவாக சுமந்திரன் தீர்வினை அறிவித்திருந்தார்.

அதாவது இப்பிரதேச செயலகம் எற்கனவே தரமுயர்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு கணக்காளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்தாகவும் இதற்கான பூரண அதி காரத்தினை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கள் வழங்குவதாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எழுத்து மூலம் உறுதியளித்துள்ளதாகவும் இதற்கான வேலைகள் எற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குண்டுத் தாக்கதலினால் இது தாமதடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.

இவர் இவ்வாறு தீர்வினை அறிவித்துக் கொண்டிருக்கும் போதே மகளின் எதிர்ப்பலைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. மூன்று மாத கால அவகாசம் கோரியபோது எதிர்ப்பானது பலமடங்கு அதிகரித்தது இத் தீர்வில் எந்த விடய மும் இல்லை எது எம்மை ஏமாற்றி காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடாகும் இதற்கு சுமந்திரன் துணைபோயுள்ளார்.

இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம், ஏற்றுக்கொள்ள மாட் டோம் என தெரிவித்து சுமாந்திரன் இடத்தினை விட்டு வெளியேறாதபடி மக் கள் ஒன்று கூடி பலதரப்பட்ட வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட வண் ணம் ஆவேசத்துடன் காணப்பட்டுள்ளனா்.

இதனைத் தொடர்ந்து பொலிசார் பாதுகாப்புடன் அவரின் வாகனத்தில் ஏற்று வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் போது கதிரை, பாதணி போன்றவற் றினால் வீசி வானத்தை வாகனத்தை நோக்கிச் சென்றனர் இதனைத் தொடர்ந்து பலத்த சிரமத்தின் மத்தியில் வாகனத்தில் ஏற்றி அனுப்பப்பட்டார், இதனையடுத்து மனோகணேசனும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளாா்.

தயாகமகே மக்களிடம் சமாதானம் கூற முனைந்தபோது மகக்கள் அதனை ஏற் றுக் கொள்ளவில்லை அவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து தீர்வுவரும் வரை போராட்டம் தொடருமென போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனா்.