Breaking News

மோட்டார் சைக்கிளுடன் மோதிய லொறியினால் பொலிஸ் உத்தியோகத்தர் பலி.!

பன்குளம் பகுதியில் லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத் துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை - ஹொரவ்பொத் தான பிரதான வீதி பன்குளம் பகுதி யில் லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளான தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தா் ஒருவா் உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து நேற்றிரவு (19.06.2019) நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக் கின்றனர். உயிரிழந்தவர் நாடாளு மன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக் வெல்லவின் பாதுகாப்பு பிரிவில் கடமை யாற்றும் ஹொரவ்பொத்தான - கபு கொல்லாவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மொரவெவ பகுதியிலிருந்து ரொட்டவெவ பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது ஹொரவ்பொத்தான பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறியுடன் மோதிய தில் இவ்விபத்து நடைபெற்றுள்ளதாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் வெளியாகியுள்ளது.

இவ் விபத்துடன் தொடர்புடைய சீமெந்து லொறியின் சாரதியை கைது செய் துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் திரு கோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது டன் விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.